அமைதிக்கான நடைப்பயணத்தில் பங்கேற்கும் பிக்குகள் குழு நாட்டிற்கு வருகை

Date:

அமைதிக்கான நடைப்பயணத்தில் பங்கேற்பதற்காக பௌத்த பிக்குகள் குழுவினர் இன்று (17) காலை நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.

நேற்று (16) துருக்கியின் இஸ்தான்புல்லில் இருந்து வருகை தந்த அவர்கள், ஏப்ரல் 21 ஆம் திகதி முதல் 28 ஆம் திகதி வரை இலங்கையின் அனுராதபுரத்திலிருந்து கொழும்பு சுதந்திர சதுக்கம் வரை முன்னெடுக்கப்படவுள்ள சமாதானத்திற்கான பாதயாத்திரையில் பங்கேற்கவுள்ளனர்.

இந்த பாதயாத்திரையானது அரசாங்கத்தின் முழுமையான அனுசரணையுடன் நடைபெறுகிறது.

அதி வணக்கத்திற்குரிய பஞ்ஞாக்கர தேரர் தலைமையிலான மகா சங்கத்தினர், அனுராதபுர ஜய ஸ்ரீ மகா போதியிலிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட போதி மரக்கன்றுடன் இந்த பாதயாத்திரையை முன்னெடுக்கவுள்ளனர்.

ஜனாதிபதி செயலகம், ‘Clean Sri Lanka’ திட்டம், புத்தசாசன, மத மற்றும் கலாசார விவகார அமைச்சு, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு, முப்படையினர் மற்றும் பொலிஸார், தேசிய வடிவமைப்பு மத்திய நிலையம் உள்ளிட்ட அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் பல இந்த சமாதான பாதயாத்திரைக்கு ஆதரவு வழங்குகின்றன.

இந்த பாதயாத்திரையின் ஊடாக இலங்கையின் பௌத்த மரபுரிமைகள், பாரம்பரிய கலை மற்றும் கைவினைத்திறன்கள் ஆகியவற்றை மக்கள் மத்தியில் கொண்டு செல்லவும் எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடி இராஜினாமா!

ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவுக்கு அனுப்பப்பட்ட உத்தியோகபூர்வ கடிதத்தின்படி, எரிசக்தி அமைச்சர் குமார...

‘ஈஸ்டர் தாக்குதல்கள்: நீதியும் தண்டனையும்’ நூல் அறிமுக நிகழ்வு

ஏப்ரல் 21, 2019 அன்று நாட்டை உலுக்கிய ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள்...

புத்தளம் தள வைத்தியசாலையில் வரலாற்றுச் சாதனை: முதன்முறையாக முள்ளந்தண்டு நேராக்கல் சத்திரசிகிச்சை வெற்றி!

புத்தளம் தள வைத்தியசாலையின் மருத்துவ வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல்லாக, மிகவும்...