ஆட்பதிவுத் திணைக்களத்தின் பெயரில் போலி அழைப்புகள்!

Date:

தனிநபர் விபரங்களைப் பெற்று நிதி மோசடி செய்யும் நோக்கில், குறிப்பிட்ட சில தரப்பினர் ஆட்பதிவுத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ அவசர தொலைபேசி இலக்கம் மற்றும் பெயரைத் தவறாகப் பயன்படுத்தி வருவதாக அந்தத் திணைக்களம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

திணைக்களத்தின் உத்தியோகபூர்வ அறிக்கையின்படி, +94115226126, +0115226126 ஆகிய உத்தியோகபூர்வ இலக்கங்களை ஒத்த எண்கள் மற்றும் 0771167739, 0742756098 ஆகிய கையடக்கத் தொலைபேசி இலக்கங்களைப் பயன்படுத்தி பொதுமக்களை ஏமாற்றும் வகையில் அழைப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அத்துடன், டிஜிட்டல் அடையாள அட்டை அல்லது ஈ-தேசிய அடையாள அட்டையை (e-National Identity Card) பதிவு செய்வதாகக் கூறி, அரச இலச்சினையைப் பயன்படுத்தி மோசடியாளர்கள் போலி மொபைல் செயலி (Mobile App) ஒன்றையும் உருவாக்கியுள்ளதாகத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

தாம் இவ்வாறான பதிவுகளை மேற்கொள்வதில்லை எனத் தெரிவித்துள்ள ஆட்பதிவுத் திணைக்களம், சந்தேகத்திற்கிடமான அழைப்புகள் அல்லது திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையதளத்தை ஒத்த https://drpgov-lk[.]com என்ற போலி இணையதளம் போன்றவற்றிடம் தனிப்பட்ட விபரங்களை வழங்க வேண்டாம் என மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.

இவ்வாறான மோசடிகளுக்குப் பலியாகாமல் பொதுமக்கள் அவதானத்துடன் இருக்குமாறும் ஆட்பதிவுத் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

கலாநிதி தம்மிக்க ஜயசிங்கவின் தந்தையாரின் மறைவுக்கு தேசிய சூரா சபை மற்றும் முஸ்லிம் லீக் வாலிப முன்னணி இரங்கல்

கலாநிதி தம்மிக்க ஜயசிங்கவின் தந்தையாரின் மறைவுக்கு தேசிய சூரா சபை மற்றும்...

ருஹுனு பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி தம்மிக ஜயசிங்கவின் தந்தை காலமானார்

ருஹுணு பல்கலைக்கழகத்தின் சிங்கள ஆய்வுத் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி தம்மிக...

900 பேருக்கு மருத்துவ சேவை: பேரிடர் பாதிப்பிலிருந்து மக்களை மீட்க MFCD மற்றும் ஜப்பான் நிறுவனங்களின் கூட்டு முயற்சி

'டிட்வா'   புயலினால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்காக நடத்தப்பட்ட இறுதி கட்ட தொற்றா நோய்கள்...

மைத்ரி விக்ரமசிங்கவிடம் வாக்குமூலம் பெற்றது குற்றப்புலனாய்வுத் திணைக்களம்!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பாரியாரான மைத்ரி விக்ரமசிங்கவிடம் குற்றப்புலனாய்வு திணைக்களம்...