நாட்டில் நிலவும் வறட்சியான வானிலை காரணமாக, கொழும்பு மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று (3) நீர் விநியோகத் தடைகள் தொடரும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை (NWSDB) அறிவித்துள்ளது.
குறித்த பகுதிகளில் வெவ்வேறு நாட்களில் 24 மணி நேர நீர்வெட்டு அமுல்படுத்தப்படும்.
பாதுக்கவில் நேற்றிரவு (02) இரவு 8.00 மணி முதல் அடுத்த 24 மணி நேரத்துக்கு நீர் வெட்டு அமுல்படுத்தப்பட்டிருந்தது.
ஹோமகமையில் இன்று (03) இரவு 8.00 மணி முதல் அடுத்த 24 மணி நேரத்துக்கு நீர் வெட்டு அமுல்படுத்தப்படும்.
பெலன்வத்தையில் நாளை (04) இரவு 8.00 மணி முதல் அடுத்த 24 மணி நேரத்துக்கு நீர்வெட்டு வெட்டு அமுலில் இருக்கும்.
இந்த சுழற்சி முறையிலான நீர் வெட்டுக்கள் பதுக்கவில் ஏப்ரல் 7, ஹோமாகமையில் ஏப்ரல் 8, பெலன்வத்தையில் ஏப்ரல் 9 ஆகிய திகதிகளிலும் அமுல்படுத்தப்படும்.
அதேநேரம், தண்ணீர் பற்றாக்குறை காரணமாக, கொழும்பின் பல பகுதிகளில் ஏப்ரல் 2 முதல் ஏப்ரல் 10 வரை மூன்று மணி நேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அறிவிப்பின்படி, பாமன்கடை, பத்தரமுல்லை, வெள்ளவத்தை, நாவல மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஒரு நாள் விட்டு ஒரு நாள் இரவு 10.00 மணி முதல் அதிகாலை 1.00 மணி வரை நீர் வெட்டு அமுல்படுத்தப்படும்.
குறைந்த அளவு தண்ணீர் விநியோகத்தை நிர்வகிப்பதற்காக இந்த தற்காலிக தண்ணீர் வெட்டுகள் அமல்படுத்தப்படுவதாகவும், பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள் இக்காலகட்டத்தில் தண்ணீரை சிக்கனமாகப் பயன்படுத்தவும், தேவையான ஏற்பாடுகளைச் செய்துகொள்ளவும் அறிவுறுத்தப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
பற்றாக்குறை தொடர்வதால், பொதுமக்கள் தண்ணீரைச் சேமிக்குமாறும் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் அமைப்புச் சபை அறிவுறுத்தியுள்ளது.
