சொத்து விபரங்களை வழங்க முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுக்கு 2 வார காலக்கெடு!

Date:

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள், தனது சொத்து மற்றும் பொறுப்புக்கள் பற்றிய விபரங்களைச் சமர்ப்பிப்பதற்கு சத்தியக்கடதாசி மூலம் நீண்ட கால அவகாசம் கோரியிருந்த போதிலும், அவ்வளவு நீண்ட காலத்தை வழங்க முடியாது என லஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அவருக்கு அறிவித்துள்ளது.

இரண்டு வார காலத்திற்குள் சொத்து விபரங்களைச் சமர்ப்பிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டு, கடந்த செவ்வாய்க்கிழமை லஞ்ச ஊழல் ஆணைக்குழு முன்னாள் ஜனாதிபதிக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளது.

எனினும், அவர் ஆவணங்களின் ஒரு பகுதியை மாத்திரமே சமர்ப்பித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதியின் மனைவி ஷிரந்தி ராஜபக்ஷ அவர்களின் பெயரில் உள்ள சொத்து ஒன்று தொடர்பில் சர்ச்சை ஏற்பட்டுள்ளதோடு, தற்போது அந்தச் சொத்தை விற்பனை செய்வதற்கோ அல்லது கைமாற்றுவதற்கோ ஆணைக்குழு தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

இது தொடர்பான தகவல்களை வழங்கத் தவறினால், குறித்த சொத்தை அரசாங்கத்திற்குப் பொறுப்பேற்க (அரசாங்கடமையாக்க) நேரிடும் என லஞ்ச ஊழல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...