நாளை (21) நாட்டின் பல மாகாணங்களில் மனித உடலால் உணரப்படும் வெப்பத்தின் அளவு ‘அவதானம்’ செலுத்த வேண்டிய மட்டத்தில் காணப்படும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இன்று (20) பிற்பகல் 3:30 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த அறிவித்தல் நாளை முழுவதற்கும் செல்லுபடியாகும்.
வடக்கு, வடமத்திய, வடமேற்கு, மேல், சப்ரகமுவ, கிழக்கு மற்றும் தென் மாகாணங்களிலும் மொனராகலை மாவட்டத்தின் சில இடங்களிலும் இந்த வெப்ப நிலை உணரப்படும்.
இதனால் ஏற்படக்கூடிய சுகாதார பாதிப்புகளைத் தவிர்க்க அதிகளவு நீர் அருந்துமாறும், வெளியில் வேலை செய்பவர்கள் போதிய ஓய்வு எடுக்குமாறும் பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
