சித்திரை புத்தாண்டு காலப்பகுதியை முன்னிட்டு ஏப்ரல் 10 முதல் 18 ஆம் திகதி வரையிலான எட்டு நாட்களில், இலங்கையின் அதிவேக நெடுஞ்சாலைகள் மூலம் 441 மில்லியன் ரூபாவிற்கும் அதிக வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை (RDA) தெரிவித்துள்ளது.
இந்த காலப்பகுதியில் மொத்தம் 1,170,830 வாகனங்கள் அதிவேக நெடுஞ்சாலைகளைப் பயன்படுத்தியுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் அனுராத ஹெட்டியாராச்சி குறிப்பிட்டுள்ளார்.
புத்தாண்டு காலத்தின் ஆரம்பமான ஏப்ரல் 10 ஆம் திகதியே அதிகப்படியான வாகனப் போக்குவரத்து பதிவாகியுள்ளது. அன்றைய தினம் 161,847 வாகனங்கள் அதிவேக நெடுஞ்சாலைகளிலிருந்து வெளியேறியுள்ளதுடன், ஒரே நாளில் 59,815,450 ரூபா அதிகபட்ச வருமானமாக ஈட்டப்பட்டுள்ளது.
