900 பேருக்கு மருத்துவ சேவை: பேரிடர் பாதிப்பிலிருந்து மக்களை மீட்க MFCD மற்றும் ஜப்பான் நிறுவனங்களின் கூட்டு முயற்சி

Date:

‘டிட்வா’   புயலினால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்காக நடத்தப்பட்ட இறுதி கட்ட தொற்றா நோய்கள் பரிசோதனை  மருத்துவ முகாமில், 300-க்கும் மேற்பட்ட உள்ளூர் பொதுமக்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர்.

இந்த விசேட மருத்துவ முகாம் அம்பத்தலையில் உள்ள கலட்டுவவத்த விகாரையில் அண்மையில் நடைபெற்றது.

ஜப்பான் பிளாட்பார்ம் (Japan Platform) அமைப்பின் தாராளமான நிதி உதவியுடன், சர்ச் வேர்ல்ட் சர்வீஸ் ஜப்பான் (Church World Service Japan) நிறுவனத்தினால் முன்னெடுக்கப்பட்ட இந்தத் திட்டம், 2026 ஜனவரி மற்றும் பெப்ரவரி மாதங்களில் கொழும்பு மற்றும் கண்டி மாவட்டங்களில் நடத்தப்பட்ட தொடர் மருத்துவ முகாம்களின் ஒரு பகுதியாகும்.

இந்தத் திட்டத்தின் மூலம் இதுவரை மொத்தம் 900 பேர் விரிவான சுகாதார சேவைகளைப் பெற்றுள்ளனர். பேரிடருக்குப் பின்னரான சவால்களை எதிர்கொள்ளும் வகையில் பின்வரும் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டன.

  • இரத்த மற்றும் சிறுநீர் பரிசோதனைகள்

  • இரத்த அழுத்த கண்காணிப்பு

  • ஈ.சி.ஜி (ECG) மற்றும் உடல் நிறை குறியீட்டெண் (BMI) மதிப்பீடுகள்

  • குடும்ப மருத்துவ வரலாறு ஆய்வுகள்

  • கண் பரிசோதனைகள்

  • மார்பக புற்றுநோய் பரிசோதனைகள்

உடனடி நிவாரணப் பணிகளுக்கு அப்பால், பாதிக்கப்பட்ட மக்களின் நீண்டகால நல்வாழ்வை உறுதி செய்வதே இந்தத் திட்டத்தின் நோக்கமாகும்.

இது ‘ஸ்பியர் அசோசியேஷன்’ (Sphere Association) மற்றும் தரநிலை மற்றும் பொறுப்புக்கூறல் குறித்த ‘கோர் மனிதாபிமான தரநிலை’ (Core Humanitarian Standard) ஆகியவற்றிற்கு இணங்க, மக்களின் கண்ணியம் மற்றும் சமமான அணுகுமுறையை உறுதி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த மனிதாபிமானப் பணி சிறப்பான முறையில் நடைபெற ஒத்துழைப்பு வழங்கிய கலட்டுவவத்த  விகாரையின் தலைமை தேரர் மற்றும் அறங்காவலர் சபையினருக்கு MFCD நிறுவனம் தனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்தது.

பேரிடர் காலங்களில் மட்டுமல்லாது, பாதிக்கப்பட்ட மக்கள் மீண்டு வந்து வலுவான வாழ்க்கையைத் தொடங்கும் வரை அவர்களுடன் இணைந்து பயணிக்கப்போவதாக MFCD மீள உறுதி பூண்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

ஆட்பதிவுத் திணைக்களத்தின் பெயரில் போலி அழைப்புகள்!

தனிநபர் விபரங்களைப் பெற்று நிதி மோசடி செய்யும் நோக்கில், குறிப்பிட்ட சில...

ருஹுனு பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி தம்மிக ஜயசிங்கவின் தந்தை காலமானார்

ருஹுணு பல்கலைக்கழகத்தின் சிங்கள ஆய்வுத் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி தம்மிக...

மைத்ரி விக்ரமசிங்கவிடம் வாக்குமூலம் பெற்றது குற்றப்புலனாய்வுத் திணைக்களம்!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பாரியாரான மைத்ரி விக்ரமசிங்கவிடம் குற்றப்புலனாய்வு திணைக்களம்...

‘வெசாக் வாரத்தில் ஹஜ்ஜுப் பெருநாள்: உழ்ஹிய்யா கடமைகளுக்கு உரிய பாதுகாப்பை வழங்குமாறு சமூக நீதிக் கட்சி கோரிக்கை.

அரசியல் இலாபங்களுக்காகவும் ஏனைய குறுகிய நோக்கங்களுக்காகவும் திட்டமிடப்பட்ட முறையில் மீண்டும் ஒரு...