உண்மை முழுமையாக வெளிப்படும் வரை நீதிக்கான எமது போராட்டம் ஓயாது: கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை

Date:

2019ஆம் ஆண்டு நடத்தப்பட்ட உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள், தற்போதைய அரசாங்கத்தின் கீழ் சாதகமான முன்னேற்றத்தைக் கண்டுள்ளதாக கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

தாக்குதல்கள் நடந்து ஏழாம் ஆண்டு நிறைவை முன்னிட்டு இன்று (21) காலை நடைபெற்ற சிறப்புத் திருப்பலியில் உரையாற்றிய போதே அவர் இதனைத் குறிப்பிட்டார்.

விசாரணைகள் ஒருபுறம் முன்னேற்றமடைந்தாலும், சில தரப்பினர் இந்தச் செயல்முறைக்குத் தொடர்ந்து தடை ஏற்படுத்த முயற்சிப்பதாக பேராயர் குற்றம் சுமத்தினார். உண்மைகள் வெளிவருவதைத் தடுப்பதில் சில சக்திகள் பின்னணியில் இயங்குவதாக அவர் சுட்டிக்காட்டினார்.

தாக்குதல்கள் தொடர்பாகத் தங்கள் கடமைகளை ஆற்றத் தவறியவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதில் நிலவும் தாமதம் குறித்து அவர் தனது அதிருப்தியை வெளியிட்டார்.

முன்னாள் ஜனாதிபதிகள், பாதுகாப்பு அமைச்சக அதிகாரிகள் மற்றும் காவல்துறை உயர்மட்ட அதிகாரிகள்.

ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரைகள் இருந்தபோதிலும், சட்டமா அதிபரும், சட்டமா அதிபர் திணைக்களமும் உரிய சட்ட நடவடிக்கைகளை எடுப்பதில் காலதாமதம் செய்துள்ளமை கவலைக்குரியது.

தாக்குதல்களில் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ சம்பந்தப்பட்ட நபர்கள் யாராக இருந்தாலும், அவர்களின் அந்தஸ்து அல்லது பதவியைப் பொருட்படுத்தாமல், குற்றப் புலனாய்வுத் துறை (CID) அவர்களைத் தீர விசாரிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...