“ஹார்முஸ் நீரிணை ஈரான் ஒத்துழைப்புடன் மட்டுமே திறக்கப்பட வேண்டும்”: பிரான்ஸ் ஜனாதிபதி

Date:

சர்வதேச வர்த்தகத்தில் முக்கிய பங்கு வகிக்கும் ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரான் முக்கியமான கருத்தை தெரிவித்துள்ளார்.

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், கடல்சார் பாதுகாப்பு மற்றும் எரிபொருள் போக்குவரத்து குறித்து மேக்ரான் ஆலோனை நடத்தினார். அப்போது பேசிய அவர், ஹார்முஸ் நீரிணையைத் திறப்பது அல்லது அங்கு போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவது என்பது ஈரானின் ஒருங்கிணைப்பு மற்றும் ஒத்துழைப்புடன் மட்டுமே சாத்தியப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

ஈரானை தவிர்த்துவிட்டு இப்பகுதியில் எடுக்கப்படும் எந்தவொரு தன்னிச்சையான முடிவும் கூடுதல் மோதல்களுக்கே வழிவகுக்கும் என அவர் எச்சரித்துள்ளார். உலகளாவிய கச்சா எண்ணெய் விநியோகத்தில் இந்த நீரிணை ஒரு முக்கியப் பாதையாக இருப்பதால், மேக்ரானின் இந்த கருத்து சர்வதேச அரசியல் அரங்கில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது.

Popular

More like this
Related

ஆரிகாமம் மஸ்ஜித் விவகாரம்: சமூக ஊடக வதந்திகளுக்கு பள்ளிவாசல் நிர்வாகம் அதிகாரப்பூர்வ தெளிவறிக்கை!

கடந்த 24.06.2026 முதல் சமூக ஊடகங்களில் ஆரிகாமம் மஸ்ஜித் தொடர்பாகப் பரப்பப்பட்டு...

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 66,064 ஆக அதிகரிப்பு

இந்த ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் பதிவாகியுள்ள டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 66,064...

அங்காரா நேட்டோ உச்சிமாநாடு 2026: உலகளாவிய பாதுகாப்பு சவால்களுக்கு மத்தியில் முக்கிய முடிவுகள்!

உலகளாவிய அரசியல் மற்றும் பாதுகாப்புச் சூழலில் பெரும் நிச்சயமற்றத்தன்மை நிலவி வரும்...