கடந்த 22 மணி நேரத்தில் கெஸ்பேவ பகுதியில் அதிகபட்சமாக 204 மி.மீ மழைப்பொழிவு பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
கம்பஹா மாவட்டத்தின் வெயங்கொடவில் 145.5 மி.மீ மழையும், வத்துப்பிட்டிவலயில் 105.5 மி.மீ மழையும் பதிவாகியுள்ளது.
இரத்தினபுரி மாவட்டத்தின் கிளிமலை பகுதியில் 121 மி.மீ மழையும், களுத்துறை மாவட்டத்தின் பண்டாரகமவில் 102.5 மி.மீ மழையும், பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
மேற்கு, சப்ரகமுவ, வடமேற்கு, வடக்கு, வடமத்திய மாகாணங்கள் மற்றும் திருகோணமலை, காலி, மாத்தறை மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும், இன்று (13) மேற்கு, சப்ரகமுவ மாகாணங்கள், புத்தளம், காலி, மாத்தறை மாவட்டங்களில் 200 மி.மீ-க்கு மேல் மிகக் கனமழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டிற்கு அருகிலுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலத்தின் காரணமாக தற்போதைய மழை நிலவரம் தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
