தற்போது நிலவும் கடும் மழைக்கால வானிலை காரணமாக, நாட்டின் பல பகுதிகளுக்கு இரண்டாம் நிலை மண்சரிவு எச்சரிக்கை (Level 2 – Amber Alert) விடுக்கப்பட்டுள்ளது.
காலி, களுத்துறை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு இவ்வாறு இரண்டாம் நிலை நிலச்சரிவு முன்கூட்டிய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) தெரிவித்துள்ளது.
அதேபோல், பதுளை, கண்டி, கேகாலை, குருணாகல், மாத்தளை, மாத்தறை, மொனராகலை மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களுக்கு முதலாம் நிலை (Level 1 – Yellow Alert) நிலச்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
