மூளைக்காய்ச்சல் குறித்து பொதுமக்களை அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை

Date:

தெனியாய பகுதியில் உள்ள சில பாடசாலைகளில் பதிவாகியிருந்த மூளைக்காய்ச்சல் நோய், தற்போது நாட்டின் மேலும் பல பகுதிகளுக்கும் பரவியுள்ளதாக விசேட மருத்துவ நிபுணர் பாலித கருணாபேம தெரிவித்துள்ளார்.

அதன்படி, தியத்தலாவ பகுதியில் 28 நோயாளர்களும் வெலிமடை பகுதியில் 13 நோயாளர்களும் ரிகில்லகஸ்கட பகுதியில் 25 நோயாளர்களும் பதிவாகியுள்ளதாக விசேட மருத்துவ நிபுணர் பாலித கருணாபேம தெரிவித்துள்ளார்.

குறிப்பாக பாடசாலை மாணவர்களிடையே அதிக காய்ச்சல், தலைவலி மற்றும் வாந்தி போன்ற அறிகுறிகளுடன் இது பரவினாலும், நோய் குறித்து பொதுமக்கள் வீண் அச்சம் கொள்ளத் தேவையில்லை என தெரிவித்தார்.

இந்த அறிகுறிகள் பொதுவாக 5 முதல் 7 நாட்கள் வரை நீடிக்கும் என்றும், முறையான மருத்துவ சிகிச்சையின் மூலம் நோயாளர்கள் குணமடைந்து வருவதோடு, நிலைமையைக் கட்டுப்படுத்த சுகாதாரத் துறையினர் தீவிர கண்காணிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார்.

இந்த மூளைக்காய்ச்சல் உணவு, நீர் மற்றும் நேரடித் தொடர்பு மூலம் பரவக்கூடும் என்பதால் தற்போது நிலவும் மழையுடனான காலநிலை மற்றும் எதிர்வரும் வெசாக் பண்டிகையை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தானசாலைகள் மூலம் இந்த நோய் மேலும் பரவக்கூடிய அபாயம் காணப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே, பொதுமக்கள் இந்த நோய் பரவல் குறித்து மிகவும் அவதானத்துடனும் பாதுகாப்புடனும் செயற்படுமாறு அவர் மேலும் கோரிக்கை விடுத்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

‘உலகிலேயே மிகச்சிறந்த சுற்றுலாத்தலம் இலங்கை தான்’: வசீம் அக்ரம் புகழாரம்!

உலகிலேயே மிகச்சிறந்த சுற்றுலாத்தலமாக தரப்படுத்தப்படுவதற்கு தகுதியான ஒரு நாடாக இலங்கை விளங்குவதாக...

ஹிஜ்ரி 1448 புத்தாண்டு வழங்கும் செய்தி: இடப்பெயர்வின் வரலாறும் நாட்காட்டியின் முக்கியத்துவமும்!

-Ash-sheikh Hassan Sulaiman (Naleemi) - (fb) காலச்சக்கரத்தின் சுழற்சியில் மற்றுமொரு ஹிஜ்ரி...

கோட்டாபய ராஜபக்ஷவின் முன்னாள் பிரத்தியேக செயலாளர் சுகீஸ்வர பண்டார கைது

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் முன்னாள் பிரத்தியேக செயலாளர் சுகீஸ்வர பண்டார,...