வைரஸ் காய்ச்சல் காரணமாக தற்காலிகமாக மூடப்பட்ட தெனியாய கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகள் நாளை முதல் மீள திறக்கப்படவுள்ளன.
தென் மாகாண ஆளுநர் தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தென் மாகாண கல்வி செயலாளர் நிஷாந்த பதிரண தெரிவித்துள்ளார்.
கடந்த 4ம் திகதி பாடசாலை மாணவர்கள் மத்தியில் இந்த வைரஸ் தொற்று பரவ ஆரம்பித்ததால் பாடசாலைகள் மூடப்பட்டன. குறித்த பாடசாலையைச் சேர்ந்த 56 மாணவர்கள் காய்ச்சலால் பீடிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் பாடசாலைக்குள் சுகாதார பாதுகாப்பு நிறைந்த சூழல் உருவாக்கப்பட்டுள்ளதுடன் நீர் பயன்பாட்டின் போது கூடுதல் கவனம் செலுத்துமாறும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
