மத்திய அதிவேக வீதியின் ரம்புக்கனை முதல் கலகெதர வரையான பகுதியின் நிர்மாணப் பணிகளுக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இதற்கென 112 பில்லியன் ரூபா நிதி செலவாகுமென மதிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த நிதியை எந்தவொரு வெளிநாட்டு கடனையும் பெறாது இலங்கை அரசின் நிதியில் ஒதுக்குவதற்கு தீர்மனிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு மற்றும் கண்டிக்கிடையிலான பிணைப்பை மேலும் வலுப்படுத்தும் மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் முக்கிய பகுதியாக ரம்புக்கனை – கலகெதர அதிவேக நிர்மாணம் அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
