இலங்கையில் மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் ‘பௌத்த – முஸ்லிம் உரையாடல்’ நூல் வெளியீடு இன்று மாலை BMICH-ல்

Date:

இலங்கையில் பல சமய, மத நல்லிணக்கம் மற்றும் பரஸ்பர புரிந்துணர்வை மேம்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்ட பௌத்த-முஸ்லிம் உரையாடல்: மதங்களுக்கிடையிலான புரிதலுக்கான கையேடு” எனும் நூல் வெளியீட்டு விழா இன்று (12) மாலை கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில்  நடைபெறவுள்ளது.

தன்வீர் நிறுவனம் (Tanweer Institute) ஏற்பாடு செய்துள்ள இந்நிகழ்வு மாலை 4.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

கலாநிதி ஆசாத் சிராஸ் மற்றும் திரிபிடகத்தில் நிபுணத்துவம் பெற்ற ரமேஷ் மதுசங்க ஆகியோரின் கூட்டு ஆய்வின் மூலம் இந்த நூல் தொகுக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சிக்கு, இலங்கையின் பௌத்த மற்றும் பாலி பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தரான வணக்கத்திற்குரிய கல்லெல்லே சுமனசிறி தேரர் தலைமை தாங்குவார்.

தலைமை விருந்தினராக புத்தசாசன, மத மற்றும் கலாச்சார விவகாரங்கள் அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனவி கலந்துகொள்ளவுள்ளார்.

 கௌரவ விருந்தினர்களாக பிரதி அமைச்சர் முனீர் முலாபர், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் பொதுச் செயலாளர் அஷ்-ஷைக் அர்கம் நூராமித் ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர்.

பேராதனைப் பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் பேராசிரியர் சமந்த இலங்ககோன் நூல் விமர்சனத்தை நிகழ்த்துவார்.

இந்த புத்தகம் இலங்கையின் இரு பிரதான மதத் தத்துவங்களுக்கு இடையிலான ஒற்றுமைகள் மற்றும் தொடர்புகள் குறித்த கல்விசார் ஆய்வுகளை உள்ளடக்கியது.

மதத் தலைவர்கள், புத்திஜீவிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பலரும் இந்நிகழ்வில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Popular

More like this
Related

தவறான மருந்தால் பார்வை இழந்தவர்களுக்கு இழப்பீடு: அமைச்சரவை அனுமதி

கண் சத்திர சிகிச்சைக்குப் பிறகு Prednisolone Acetate மருந்து வழங்கப்பட்டதால் பார்வை...

நிந்தவூரில் நடைபெற்ற மஸ்ஜிதுகள் ஊடாக சமூகத்தை வலுவூட்டல் செயலமர்வு: MEEDS திட்டமும் அறிமுகம்!

நிந்தவூர் ஜும்மா பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபையின் எல்லைக்குட்பட்ட பகுதிகளை முறையான வழிகாட்டல்களின்...

எல் நினோவை சமாளிக்க அமைச்சரவை உப குழு நியமனம்

எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய எல் நினோ நிலைமைக்கு முகம்கொடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைள்...

டெங்கு பரவல் காரணமாக மொறட்டுவை பல்கலைக்கழகம் தற்காலிகமாக மூடல்

 மொறட்டுவை பல்கலைக்கழக மாணவர்கள் சிலர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, பல்கலைக்கழகத்தின்...