கஹட்டோவிட அல் பத்ரியா மகா வித்தியாலயம் 2025 ஆம் ஆண்டு நடைபெற்ற உயர்தரப் பரீட்சையில் கம்பஹா கல்வி வலயத்தில் முதலாம் இடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளது.
கம்பஹா கல்வி வலயத்திலுள்ள சிங்கள தமிழ் மொழி மூல 45 பாடசாலைகளிலும் கஹட்டோவிட அல் பத்ரியா மகா வித்தியாலயமே இம்முறைய உயர்தர பரீட்சை அடைவுகளில் முதல் இடத்தைப் பெற்றுள்ளது.
உயர்தர பரீட்சை அடைவுகளின் தர வரிசையில் முதல் 9 இடங்களில் உள்ள ஒரே முஸ்லிம் பாடசாலையாகவும் அல் பத்ரியா இடம் பிடித்துள்ளது.
அல் பத்ரியா மகா வித்தியாலயத்தில் இருந்து உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய 21 பேரில் 19 பேர் பல்கலைக் கழகத்துக்கு விண்ணப்பிக்கத் தகுதி பெற்றுள்ளனர். இது 90.48 வீத அடைவாகும். இவர்களில் வர்த்தகத் துறையில் தோற்றிய 09 பேரில் 09 பேரும் பல்கலைக் கழகத்துக்கு விண்ணப்பிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.
அல் பத்ரியாவுக்கு அடுத்ததாக 88.89 வீதத்துடன் கம்புறாகல்ல பன்னில ஆனந்த மகா வித்தியாலயம் இரண்டாவது இடத்தைப் பெற்றுள்ளது. பிரபல பாடசாலைகளான ரத்னாவலி பாலிகா (03), பண்டாரநாயக்க சென்ட்ரல் (மத்திய கல்லூரி) (04), யசோதரா தேவி பாலிகா (06) போன்றவற்றைப் பின்தள்ளியே அல் பத்ரியா இந்தச் சாதனையைப் படைத்துள்ளது.
