வைரஸ் காய்ச்சலால் மூடப்பட்ட பாடசாலைகள் நாளை திறப்பு!

Date:

வைரஸ் காய்ச்சல் காரணமாக தற்காலிகமாக மூடப்பட்ட தெனியாய கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகள் நாளை முதல் மீள திறக்கப்படவுள்ளன.

தென் மாகாண ஆளுநர் தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தென் மாகாண கல்வி செயலாளர் நிஷாந்த பதிரண தெரிவித்துள்ளார்.

கடந்த 4ம் திகதி பாடசாலை மாணவர்கள் மத்தியில் இந்த வைரஸ் தொற்று பரவ ஆரம்பித்ததால் பாடசாலைகள் மூடப்பட்டன. குறித்த பாடசாலையைச் சேர்ந்த 56 மாணவர்கள் காய்ச்சலால் பீடிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் பாடசாலைக்குள் சுகாதார பாதுகாப்பு நிறைந்த சூழல் உருவாக்கப்பட்டுள்ளதுடன் நீர் பயன்பாட்டின் போது கூடுதல் கவனம் செலுத்துமாறும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

தவறான மருந்தால் பார்வை இழந்தவர்களுக்கு இழப்பீடு: அமைச்சரவை அனுமதி

கண் சத்திர சிகிச்சைக்குப் பிறகு Prednisolone Acetate மருந்து வழங்கப்பட்டதால் பார்வை...

நிந்தவூரில் நடைபெற்ற மஸ்ஜிதுகள் ஊடாக சமூகத்தை வலுவூட்டல் செயலமர்வு: MEEDS திட்டமும் அறிமுகம்!

நிந்தவூர் ஜும்மா பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபையின் எல்லைக்குட்பட்ட பகுதிகளை முறையான வழிகாட்டல்களின்...

எல் நினோவை சமாளிக்க அமைச்சரவை உப குழு நியமனம்

எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய எல் நினோ நிலைமைக்கு முகம்கொடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைள்...

டெங்கு பரவல் காரணமாக மொறட்டுவை பல்கலைக்கழகம் தற்காலிகமாக மூடல்

 மொறட்டுவை பல்கலைக்கழக மாணவர்கள் சிலர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, பல்கலைக்கழகத்தின்...