இம்முறை ஹஜ் யாத்திரையில் பங்கேற்கும் இலங்கை யாத்திரிகர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் உறுதிப்படுத்தும் நோக்கில் மத மற்றும் கலாசார அலுவல்கள் பிரதியமைச்சர் முனீர் முலப்பரின் தலைமையில் நேற்றைய தினம் சவூதி அரேபியாவிலுள்ள இலங்கை சிலோன் ஹவுஸில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.
இதில் இலங்கை ஹஜ் குழுவின் தலைவர் ரியாஸ் மிஹூலார் உள்ளிட்ட குழு அங்கத்தவர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றிருன்தனர்.
ஹஜ் யாத்திரையின் முக்கியத்துவம் மற்றும் கடினமான கட்டமான மினா மற்றும் அரபா ஆகிய புனித இடங்களில் இலங்கையர்களுக்கென அமைக்கப்பட்டுள்ள கூடாரங்கள் உட்பட அடிப்படை வசதிகளின் தற்போதைய நிலை குறித்து கலந்துரையாடப்பட்டது.

