ஹஜ் யாத்திரை குறித்து பிரதி அமைச்சர் முனீர் தலைமையில் விசேட கலந்துரையாடல்

Date:

இம்முறை ஹஜ் யாத்திரையில் பங்கேற்கும் இலங்கை யாத்திரிகர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் உறுதிப்படுத்தும் நோக்கில் மத மற்றும் கலாசார அலுவல்கள் பிரதியமைச்சர் முனீர் முலப்பரின் தலைமையில் நேற்றைய தினம் சவூதி  அரேபியாவிலுள்ள இலங்கை சிலோன் ஹவுஸில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.

இதில் இலங்கை ஹஜ் குழுவின் தலைவர் ரியாஸ் மிஹூலார் உள்ளிட்ட குழு அங்கத்தவர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றிருன்தனர்.

ஹஜ் யாத்திரையின் முக்கியத்துவம் மற்றும் கடினமான கட்டமான மினா மற்றும் அரபா ஆகிய புனித இடங்களில் இலங்கையர்களுக்கென அமைக்கப்பட்டுள்ள கூடாரங்கள் உட்பட அடிப்படை வசதிகளின் தற்போதைய நிலை குறித்து கலந்துரையாடப்பட்டது.

ஹாஜிகள் எவ்வித தடையுமின்றி தமது மத வழிபாடுகளில் ஈடுபடும் வகையில் தங்குமிடம், குளிரூட்டி வசதிகள், குடிநீர் மற்றும் சுகாதார அமைப்புகளை சிறந்த முறையில் தயார்படுத்துவது குறித்து பிரதி அமைச்சர் இதன்போது கவனம் செலுத்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் தடுப்பு: நாடு முழுவதும் 18 புதிய கோல்போஸ்கோபி இயந்திரங்கள் வழங்கிவைப்பு!

இலங்கையில் ஐந்தாவது பொதுவான புற்றுநோயான கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயைக் கண்டறிவதற்கும், அது...

விமல் வீரவன்ச கைது

இராணுவ வீரர் நினைவு தின நிகழ்விற்கான ஒத்திகை செயற்பாடுகளுக்கு இடையூறு விளைவித்த...

வித்தியா கொலை வழக்கின் தண்டனை கைதி தற்கொலை

புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா கொலை வழக்கில் மரண தண்டனை நியமிக்கப்பட்ட...