இலங்கையைச் சூழவுள்ள வளிமண்டலத்தின் கீழ் அடுக்குகளில் நிலவும் தளம்பல் நிலை, அடுத்த 36 மணித்தியாலங்களுக்குள் ஒரு குறைந்த அழுத்தப் பிரதேசமாக வலுவடையக்கூடும்.
இந்தத் தொகுதியின் தாக்கம் காரணமாக வரும் நாட்களில் நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றின் வேகம் அதிகரிக்கக்கூடும்.
இது தொடர்பாக வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்படும் மேலதிக முன்னறிவிப்புகள் மற்றும் அறிவித்தல்கள் குறித்து அவதானமாக இருக்குமாறு மீனவ மற்றும் கடற்போக்குவரத்து சமூகத்தினர் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
காற்று தென்மேற்கு திசையிலிருந்து அல்லது ஒரு குறிப்பிட்ட திசையின்றியும் வீசக்கூடும்.
காற்றின் வேகம் மணிக்கு (20-30) கிலோமீற்றர் வரை காணப்படும். காலி முதல் மாத்தறை ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 50 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும்.
காலி முதல் மாத்தறை ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்பரப்புகள் அவ்வப்போது ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும். நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகள் சாதாரண நிலை முதல் மிதமான கொந்தளிப்பு வரை காணப்படும்.
இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் அந்த கடற்பரப்புகளில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடுவதுடன், அக்காலப்பகுதியில் அக் கடற்பரப்புகள் தற்காலிகமாக மிகவும் கொந்தளிப்பாகவும் காணப்படும்.
