கொழும்பு கோட்டையிலிருந்து யாழ்ப்பாணம், காங்கேசன்துறை வரை பயணிக்கும் யாழ் தேவி (Yal Devi) புகையிரதம் இன்று (11) முதல் மீண்டும் சேவையில் ஈடுபடுத்தப்படுவதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி, கொழும்பு கோட்டையிலிருந்து காங்கேசன்துறை வரை திங்கள், புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மாத்திரம் யாழ் தேவி புகையிரதம் இயக்கப்படும் என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
அதேபோல், காங்கேசன்துறையிலிருந்து கொழும்பு கோட்டைக்கான புகையிரத சேவை செவ்வாய், வியாழன் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மாத்திரம் இடம்பெறும்.
இந்த புகையிரதம் குளிரூட்டப்பட்ட 04 முதல் வகுப்பு பெட்டிகளைக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
