வெசாக் பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் ஏற்பாடு செய்யப்படும் தன்சல் எனப்படும் தானசாலை நிகழ்வுகளை பதிவு செய்வதற்கான செயற்பாடு இன்று ஆரம்பிக்கப்படுமென சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
பொது சுகாதார வைத்திய அதிகாரிகள் ஊடாக இந்த பதிவு பணிகள் இடம்பெறும். தன்சல் நிகழ்வுகளை நடத்துவது தொடர்பில் விசேட வழிகாட்டுதல்கள் வழங்கப்படவுள்ளன.
இவற்றை உரிய பொது சுகாதார பரிசோதகர்கள் ஊடாக பெற்றுக்கொள்ள முடியுமென சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
