லங்கா பிரீமியர் லீக் (LPL) தொடருக்கான வெளிநாட்டு வீரர்களின் பதிவு நாளை (08) முதல் ஆரம்பமாகவுள்ளது.
இந்த பதிவு செயல்முறை வரும் 18ஆம் திகதி வரை நடைபெறும் என ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.srilankacricket.lk ஊடாக வீரர்கள் இந்த இணையவழி (Online) பதிவுகளை மேற்கொள்ள முடியும்.
LPL தொடரானது நாட்டின் நான்கு பிரதான மைதானங்களில் நடைபெறவுள்ளது. அதன்படி, கொழும்பு எஸ்.எஸ்.சி (SSC) மற்றும் ஆர். பிரேமதாச, கண்டி பல்லேகல மற்றும் தம்புள்ளை ரங்கிரி சர்வதேச கிரிக்கெட் மைதானங்களில் போட்டிகள் நடத்தப்படவுள்ளன.
இத்தொடர் எதிர்வரும் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் நடைபெறத் திட்டமிடப்பட்டுள்ளது.
