பசில் ராஜபக்ஷவை கைது செய்ய உத்தரவு!

Date:

முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவை கைது செய்யுமாறு மாத்தறை நீதிவான் நீதிமன்றம் இன்று பிறப்பித்துள்ளது.

சட்டவிரோதமாக நிதி பெறப்பட்டதாகக் கூறப்படும் வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் முன்னிலையாகத் தவறியதையடுத்து, மாத்தறை பிரதான நீதிவான் சதுரங்க எரங்க திசாநாயக்க இந்த உத்தரவினை பிறப்பித்தார்.

மாத்தறை, எலியகந்த வீதியில் உள்ள பிரவுன்ஸ் ஹில் முகவரியில் அமைந்துள்ள ஒன்றரை ஏக்கர் நிலத்தை வாங்குவது தொடர்பாக பொலிஸ் நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவால் தாக்கல் செய்யப்பட்ட ஒரு வழக்கு சம்பந்தமாக, பசில் ராஜபக்ஷ இன்று (22) மாத்தறை நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலையாகாத காரணத்தால் பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

முன்னாள் அமைச்சர் தற்போது உடல்நலக்குறைவுக்காக வெளிநாட்டில் சிகிச்சை பெற்று வருவதால் நீதிமன்றில் முன்னிலயாக முடியாமல் போனது என தெரிவித்து, மருத்துவ அறிக்கைகளை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார் பசில் ராஜபக்ஷவின் சட்டத்தரணி நீதிமன்றில் தெரிவித்தார்.

எனினும், சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கைகளைக் கருத்தில் கொண்டும், பசில் ராஜபக்ஷ பலமுறை நீதிமன்றத்தில் முன்னிலையாகத் தவறியதைக் கருத்தில் கொண்டும், அவரைக் கைது செய்ய பிடியாணை பிறப்பிக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

கபில சந்திரசேனவின் மரண விசாரணைகள் மீள ஆரம்பம்

ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில...

வெள்ளப் பெருக்கு குறித்து எச்சரிக்கை!

அடுத்த 48 மணி நேரத்தில் களனி ஆற்றுப் படுகையை அண்மித்த (தாழ்வான)...

21 பாதாள உலக குழு உறுப்பினர்கள் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டனர்!

டுபாயில் இருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டதாகக் கூறப்படும் 21 பாதாள உலகக்...

வாகன இலக்கத் தகடுகளை பெற்றுக் கொள்ளுமாறு அறிவிப்பு!

2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளைச் சேர்ந்த அச்சிடப்பட்டும் உரிமை கோரப்படாமலும்...