மாகாண சபைத் தேர்தல் இந்த வருடத்திற்குள் நிச்சயமாக நடத்தப்படும்

Date:

மாகாண சபைத் தேர்தலை நடத்துவது குறித்து அரசாங்கத்தின் தற்போதைய நிலைப்பாட்டை விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் பேராசிரியர் கிரிஷாந்த அபேசேன தெளிவுபடுத்தியுள்ளார்.

இந்த வருடத்திற்குள் (2026) மாகாண சபைத் தேர்தல் நிச்சயமாக நடத்தப்படும் என விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் பேராசிரியர் கிரிஷாந்த அபேசேன தெரிவித்துள்ளார்.

கண்டியில் இன்று (15) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனைத் குறிப்பிட்டார்.

எனினும், இந்த ஆண்டின் எந்தக் காலப்பகுதியில் தேர்தல் நடத்தப்படும் என்பது குறித்த துல்லியமான திகதியை இப்போது உறுதியாகக் கூற முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

மாகாண சபைத் தேர்தல் நிச்சயம் நடத்தப்படும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.

 

தேர்தலை நடத்துவதில் அரசாங்கம் திட்டமிட்டு எவ்வித தாமதத்தையும் ஏற்படுத்தவில்லை.

இந்த வருடத்திற்குள் தேர்தலை நடத்தி முடிக்கும் தெளிவான நிலைப்பாட்டிலேயே தற்போதைய அரசாங்கம் உள்ளது.

எனவே, மாகாண சபைத் தேர்தல் ஒத்திவைக்கப்படுமா என்பது குறித்து பொதுமக்கள் எவரும் அச்சப்பட வேண்டிய தேவையில்லை என்றும் அமைச்சர் பேராசிரியர் கிரிஷாந்த அபேசேன மேலும் வலியுறுத்தியுள்ளார்.

Popular

More like this
Related

டெங்கு பரவல் காரணமாக மொறட்டுவை பல்கலைக்கழகம் தற்காலிகமாக மூடல்

 மொறட்டுவை பல்கலைக்கழக மாணவர்கள் சிலர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, பல்கலைக்கழகத்தின்...

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்: காயமடைந்த சிறை அதிகாரிகளை சந்தித்த அமைச்சர்

நீர்கொழும்பு சிறைச்சாலைக்குள் ஏற்பட்ட வன்முறையில் காயமடைந்த நிலையில் சிகிச்சைப் பெற்று வரும்...

காஸாவில் கிட்டத்தட்ட இரண்டு தசாப்த கால ஹமாஸ் ஆட்சி கலைப்பு: நிர்வாகப் பொறுப்பை ஏற்கிறது நிபுணர்கள் குழு!

பாலஸ்தீனத்தின் காஸா பகுதியை கடந்த 20 ஆண்டுகளாக நிர்வகித்து வந்த தன்னாட்சி...