துருக்கியில் நெகிழ்ச்சி: தொழுகை பிரசங்கத்தை சைகை மொழியில் மொழிபெயர்க்கும் பள்ளிவாசல்

Date:

துருக்கியின் காசியான்டெப் (Gaziantep) மாகாணத்தில் உள்ள ஷாஹீன் பே (Şahinbey) மாவட்டத்தில் அமைந்துள்ள ‘ஜாமிஃ அல்-உம்மா’ (Ummmah Mosque) பள்ளிவாசல், வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகையின் போது ஒரு சிறப்பான நடைமுறையை அமல்படுத்தியுள்ளது.

அங்குள்ள செவித்திறன் குறைபாடுடையவர்களுக்காக, இமாமின் போதனைகளை (குத்பா) உடனுக்குடன் விளக்கும் வகையில் ஒரு சைகை மொழி மொழிபெயர்ப்பாளர் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், பள்ளிவாசலுக்குள் அவர்களுக்கு என ஒரு தனிப்பகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது.

வெள்ளிக்கிழமை பிரசங்கத்தின் போது, இமாம் பேசும் கருத்துக்களை சைகை மொழிபெயர்ப்பாளர் அதே நேரத்தில் சைகை மொழியில் மொழிபெயர்த்து வழங்குகிறார்.

செவித்திறன் குறைபாடுடையவர்கள் மற்றும் காது கேளாதோர் இந்த பிரசங்கத்தை எவ்வித சிரமமுமின்றி தெளிவாகப் பார்த்துப் புரிந்துகொள்வதற்காக, அவர்களுக்கு பள்ளிவாசல் முன்பகுதியில் பிரத்யேக இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த உன்னதமான முயற்சி ஷாஹீன் பே நகராட்சியின் (Şahinbey Municipality) ஒத்துழைப்புடன் செயல்படுத்தப்பட்டுள்ளது. எந்தவொரு பாகுபாடுமின்றி, மாற்றுத்திறனாளிகள் உட்பட சமூகத்தின் அனைத்து தரப்பினரும் வழிபாட்டுத் தலங்களுக்கு வருவதை உறுதி செய்வதில் துருக்கி காட்டும் அக்கறையை இந்த நடவடிக்கை பிரதிபலிக்கிறது.

 

Popular

More like this
Related

ராஷித் அல்-கன்னூசியின் உடல்நிலை குறித்து சர்வதேச முஸ்லிம் உலமாக்கள் ஒன்றியம் கவலை: துனிசிய அரசிற்கு கோரிக்கை!

துனிசியாவின் மூத்த அரசியல் தலைவரும், பிரபல இஸ்லாமிய அறிஞருமான ஷேக் ராஷித்...

முதலீட்டாளர் நம்பிக்கையில் இலங்கை முன்னேற்றம்

முதலீட்டாளர் உறவுகள் மற்றும் கடன் வெளிப்படைத்தன்மை தொடர்பில் வேகமாக முன்னேறி வரும்...

சுரேஷ் சலேயின் ரிட் மனு இன்று மீண்டும் விசாரணைக்கு!

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளுக்கு அமைய, பயங்கரவாதத் தடைச்...

இன்று முதல் தென்மேற்குப் பகுதியில் மழை அதிகரிக்கும்!

இன்று முதல் அடுத்த சில நாட்களுக்கு நாட்டின் தென்மேற்குப் பகுதியில் மழைவீழ்ச்சி...