பொசொன் தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் 18,412 தன்சால்கள் பதிவு!

Date:

பொசொன் பெளர்ணமி பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் 18,000-க்கும் மேற்பட்ட ‘தன்சால்கள்’ (தானசாலைகள்) பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அதன்படி, இதுவரை 18,412 தன்சால்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் சங்கத்தின் செயலாளர் சாமில் முத்துக்குட குறிப்பிட்டார்.

நாளை (30) மற்றும் அதற்கு அடுத்த நாள் ( ஜூலை 01) செயல்படவுள்ள தான்சால்களில் ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் என்று அவர் தெரிவித்தார்.

பொசொன் பண்டிகை நடைபெறும் பகுதிகளில் அமைந்துள்ள கடைகள் மற்றும் தற்காலிக விற்பனை நிலையங்களும் பொசொன் வாரம் முழுவதும் கண்காணிக்கப்படும்.

உணவு மற்றும் பானங்களை வழங்கும் போது பிளாஸ்டிக்கைப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு தான்சால் ஏற்பாட்டாளர்களை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

மேலும், சூடான அல்லது குளிர்ந்த உணவுகளை பொலித்தீன் பைகளில் சேமித்து வைப்பது குறிப்பிடத்தக்க சுகாதார அபாயங்களை ஏற்படுத்தும் என்று எச்சரித்த சங்கம், பாதுகாப்பான உணவு கையாளுதல் நடைமுறைகளில் மிகுந்த கவனம் செலுத்துமாறும் ஏற்பாட்டாளர்களைக் கேட்டுக்கொண்டது.

அதேநேரம், தற்போது பரவி வரும் டெங்கு காய்ச்சல் குறித்து விழிப்புடன் இருக்குமாறும் ஏற்பாட்டாளர்களையும் பொதுமக்களையும் சங்கம் கேட்டுக்கொண்டது.

பானங்களை வழங்கப் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் கோப்பைகள் மற்றும் ஒருமுறை பயன்படுத்தக்கூடிய பிற பொருட்கள் பெரும்பாலும் முறையற்ற விதத்தில் வீசப்படுவதால், அவை நுளம்புகள் இனப்பெருக்கம் செய்யும் இடங்களாக மாறக்கூடும் என்று அது சுட்டிக்காட்டியது.

எனவே, அனைத்து பிளாஸ்டிக் கழிவுகளும் பொறுப்புடனும் முறையான விதத்திலும் அகற்றப்படுவதை உறுதி செய்யுமாறு அனைத்து தரப்பினரையும் பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் வலியுறுத்தியது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

நாட்டில் டெங்கு மரணங்கள் 47 ஆக அதிகரிப்பு

நாட்டில் பதிவாகியுள்ள டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 47 ஆக உயர்ந்துள்ளதாக தேசிய...

ஸ்ரெப்ரெனிகா இனப்படுகொலையை மூடிமறைக்க முயன்றது எப்படி?: 30 ஆண்டுகளின் பின்னும் தொடரும் நீதித் தேடல்.

முப்பதாண்டுகளுக்கு முன்பு, ஜெனரல் ரட்கோ மிலாடிச் (Ratko Mladic) தலைமையிலான போஸ்னிய...

நீர்கொழும்பு சிறை மோதலில் உயிரிழந்த அதிகாரிகளுக்கு பதவி உயர்வு

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலில் உயிரிழந்த 8 அதிகாரிகளுக்கு சிறைச்சாலைகள் திணைக்களம் பதவி...

‘ஹபீபி’ திரைப்படத்தின் வருகையும் கலாச்சார மைல்கல்லும்: தமிழ்நாட்டின் திராவிட அரசியல் சூழலும் சிறுபான்மையினர் பிரதிநிதித்துவமும்

-ஃபாரிஸ் சாலி சிரேஷ்ட சட்டத்தரணி (கொழும்பு) சினிமா என்பது நம் காலத்தின் மிகச் சக்திவாய்ந்த...