வெனிசுலாவில் நிலநடுக்கத்தால் பலி எண்ணிக்கை 235 ஆக அதிகரிப்பு – 4300 பேர் காயம்

Date:

வெனிசுலா நாட்டில் நேற்று அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 235ஆக அதிகரித்துள்ளது. மேலும் 4300 பேர் காயம் அடைந்துள்ளனர். மீட்பு பணிகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றன.

தென் அமெரிக்க நாடான வெனிசுலாவின் தலைநகர் கராகசுக்கு மேற்கே, 160 கி.மீ., தொலைவில் உள்ள மொரோன் கடற்கரை பகுதிக்கு அருகில், 39 வினாடி இடைவெளியில் அடுத்தடுத்து இரண்டு நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. முதல் நிலநடுக்கம் 7.2 ரிக்டர் அளவுக்கு, தரையில் இருந்து 26 கி.மீ., ஆழத்தில் ஏற்பட்டது. இரண்டாவது நிலநடுக்கம் 7.5 ரிக்டர் அளவுக்கு, 10 கி.மீ., ஆழத்தில் பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

அடுத்தடுத்து ஏற்பட்ட இந்த இரட்டை நிலநடுக்கத்தால், நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் நுாற்றுக்கணக்கான கட்டடங்கள் இடிந்து விழுந்தன. பல இடங்களில் சாலைகளில் வெடிப்புகள் ஏற்பட்டு பிளந்துள்ளன.

தலைநகர் கராகசை ஒட்டியுள்ள லா குவைரா பகுதி மிக மோசமாக பாதிப்படைந்துள்ளதால், அது, ‘பேரிடர் மண்டலமாக’ அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் மட்டும் அதிகளவிலான கட்டடங்கள் இடிந்து விழுந்துள்ளன.கராகசின் அல்டமிரா பகுதியில், 22 மாடிகளை கொண்ட பெரிய கட்டடம் ஒன்று இடிந்து விழுந்து முற்றிலும் தரைமட்டமாகியுள்ளது.

நிலநடுக்கங்களால் இதுவரை 235 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 4300 பேர் காயம் அடைந்துள்ளனர். மீட்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

பல அடுக்குமாடி குடியிருப்புகள் இடிந்து விழுந்துள்ளதால், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. வெனிசுலாவின் முதன்மையான விமான நிலையமான சைமன் பொலிவர் சர்வதேச விமான நிலையம் கடுமையாக சேதமடைந்ததையடுத்து மூடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

QR குறியீடு மூலமான எரிபொருள் ஒதுக்கீட்டு முறை தொடரும்: கனிப்பொருள் கூட்டுத்தாபனம் அதிரடி அறிவிப்பு!

நாட்டில் தற்போது நடைமுறையிலிருக்கும் QR குறியீடு அடிப்படையிலான எரிபொருள் ஒதுக்கீட்டு முறையை...

தண்ணீரை சிக்கனமாகப் பயன்படுத்துமாறு கோரிக்கை!

நீர்ப்பாசனத் துறை இயக்குநர், நீர் மேலாண்மைப் பொறியாளர் எச்.எம்.பி.எஸ்.டி. ஹெரத், தனது...

HIV மற்றும் பாலியல் சார் நோய்களைக் கண்டறிய விசேட ‘நடமாடும் முகாம்கள்’!

எச்.ஐ.வி, கல்லீரல் அழற்சி (Hepatitis) மற்றும் பாலியல் சார் நோய்களை முன்கூட்டியே...

ஜூலை 13: கோட்டாபய ராஜபக்ஷ இலங்கையை விட்டு வெளியேறி நான்கு ஆண்டுகள் – ஒரு பார்வை

இலங்கையின் மிகவும் சக்திவாய்ந்த நிறைவேற்று ஜனாதிபதிகளில் ஒருவரான  கோட்டாபய ராஜபக்ஷவை 2022,...