அண்மையில் வெளியிடப்பட்ட க.பொ.த (சாதாரண தரம்) – 2025 (2026) பரீட்சை முடிவுகளில், புத்தளம் சாஹிரா கல்லூரி (தேசிய பாடசாலை) 75% ஒட்டுமொத்த சித்தி வீதத்தைப் பெற்று சிறந்த சாதனையை நிலைநாட்டியுள்ளது.
இம்முறை இப்பாடசாலையிலிருந்து பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களில் பெரும்பாலோர் உயர்தரத்திற்குத் தகுதி பெற்று பாடசாலைக்குப் பெருமை சேர்த்துள்ளனர்.
-
தோற்றிய மொத்த மாணவர்கள்: 167
-
சித்தியடைந்தோர் எண்ணிக்கை: 125
-
ஒட்டுமொத்த சித்தி வீதம்: 75%
பாடசாலையின் தரம் 11 பிரிவுகளில் 11E வகுப்பு 95% சித்தி வீதத்தைப் பெற்று முதலிடத்தைப் பிடித்துள்ளதுடன், 11F வகுப்பு 80% சித்தி வீதத்தைப் பெற்று அடுத்தடுத்த இடங்களை உத்தியோகபூர்வமாகப் பெற்றுள்ளன.
மாணவர்களின் கல்வி முன்னேற்றத்திற்காக அர்ப்பணிப்புடன் வழிகாட்டிய தரம் 11 பகுதித் தலைவர் S.B. Seyad Ahmed, இருமொழிப் பிரிவு இணைப்பாளர் S.R.M.M. Azard மற்றும் வகுப்பாசிரியர்களான A.R.S. Rizfah, M.L.F. Hasnath, M.K.F. Asnas, F.M.M. Izrath, M.N. Naslun Hasna, H.H.M. Sajeeth, M.F.F. Fasna ஆகியோருக்குப் பாடசாலை நிர்வாகம் விசேட நன்றிகளைத் தெரிவித்துள்ளது.
மேலும், இப்பெருமைமிகு வெற்றிக்குக் காரணமான பாட ஆசிரியர்கள், அதிபர், பிரதி அதிபர் S.S.M. Rasadh (தரம் 10, 11 பொறுப்பாளர்), பெற்றோர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள் மற்றும் பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள் ஆகியோருக்கும், சாதனை படைத்த மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் பாடசாலை சமூகம் தமது மனமார்ந்த பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறது.
“கல்வியே உயர்வின் திறவுகோல்; முயற்சியே வெற்றியின் அடித்தளம்” என்ற உயரிய சிந்தனைக்கு ஏற்ப சாதித்துக் காட்டிய அனைத்து மாணவர்களுக்கும் NewsNow சார்பில் எமது வாழ்த்துக்கள்!
