ஈரானுக்கான புதிய இலங்கைத் தூதுவராக பேராசிரியர் பஸீஹா அஸ்மி பொறுப்பேற்பு

Date:

ஈரான் இஸ்லாமியக் குடியரசுக்கான இலங்கையின் புதிய தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள பேராசிரியர் பஸீஹா அஸ்மி  கடமைகளை உத்தியோகபூர்வமாகப் பொறுப்பேற்றுள்ளார்.
தெஹ்ரானில் அமைந்துள்ள இலங்கைத் தூதரகத்தில் நேற்று (30)  தனது பணிகளை ஆரம்பித்தார்.

இராஜதந்திரப் பணிக்கு முன்னர், பேராதனைப் பல்கலைக்கழகத்தின் புவியியல் துறையில் பேராசிரியராகப் பணியாற்றிய அவர், புவியியல் துறையில் முதலாம் வகுப்புச் சித்தியுடன் இளநிலைப் பட்டத்தையும், நோர்வே அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் (NTNU) M.Phil மற்றும் PhD பட்டங்களையும் பெற்றுள்ளார்.

20 ஆண்டுகளுக்கும் மேலான கல்வி மற்றும் ஆராய்ச்சி அனுபவம் கொண்ட பேராசிரியர் பஸீஹா அஸ்மி, இளைஞர் விவகாரங்கள், வறுமை ஒழிப்பு, பெண்கள், புலம்பெயர்வு, உள்நாட்டு இடப்பெயர்வுகள் மற்றும் போருக்குப் பின்னரான அபிவிருத்தி உள்ளிட்ட பல சமூகப் பொருளாதாரத் துறைகளில் குறிப்பிடத்தக்க ஆய்வுகளை மேற்கொண்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

பேராயர் டொன் விமலசிறி ஜயசூரியவின் வருகையை முன்னிட்டு விசுத்தாராம விகாரையில் நடைபெற்ற சர்வ மதத் தலைவர்களுடனான கலந்துரையாடல்!

சிலாபம் மறைமாவட்டப் பேராயராகப் புதிதாகக் கடமையேற்றுள்ள கௌரவத்திற்குரிய டொன் விமலசிறி ஜயசூரிய...

இலங்கை கடற்படையின் முன்னாள் தளபதி வசந்த கரன்னாகொட கைது!

இலங்கை கடற்படையின் முன்னாள் தளபதி Admiral of the Fleet வசந்த...

அர்ஜுனாவின் MP பதவியை ரத்து செய்யக் கோரி நீதிமன்றில் மனு!

பாராளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ஜுனாவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை செல்லுபடியற்றதாக்குமாறு கோரி...