ஈரானுக்கான புதிய இலங்கைத் தூதுவராக பேராசிரியர் பஸீஹா அஸ்மி பொறுப்பேற்பு

Date:

ஈரான் இஸ்லாமியக் குடியரசுக்கான இலங்கையின் புதிய தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள பேராசிரியர் பஸீஹா அஸ்மி  கடமைகளை உத்தியோகபூர்வமாகப் பொறுப்பேற்றுள்ளார்.
தெஹ்ரானில் அமைந்துள்ள இலங்கைத் தூதரகத்தில் நேற்று (30)  தனது பணிகளை ஆரம்பித்தார்.

இராஜதந்திரப் பணிக்கு முன்னர், பேராதனைப் பல்கலைக்கழகத்தின் புவியியல் துறையில் பேராசிரியராகப் பணியாற்றிய அவர், புவியியல் துறையில் முதலாம் வகுப்புச் சித்தியுடன் இளநிலைப் பட்டத்தையும், நோர்வே அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் (NTNU) M.Phil மற்றும் PhD பட்டங்களையும் பெற்றுள்ளார்.

20 ஆண்டுகளுக்கும் மேலான கல்வி மற்றும் ஆராய்ச்சி அனுபவம் கொண்ட பேராசிரியர் பஸீஹா அஸ்மி, இளைஞர் விவகாரங்கள், வறுமை ஒழிப்பு, பெண்கள், புலம்பெயர்வு, உள்நாட்டு இடப்பெயர்வுகள் மற்றும் போருக்குப் பின்னரான அபிவிருத்தி உள்ளிட்ட பல சமூகப் பொருளாதாரத் துறைகளில் குறிப்பிடத்தக்க ஆய்வுகளை மேற்கொண்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

நாட்டில் டெங்கு மரணங்கள் 47 ஆக அதிகரிப்பு

நாட்டில் பதிவாகியுள்ள டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 47 ஆக உயர்ந்துள்ளதாக தேசிய...

ஸ்ரெப்ரெனிகா இனப்படுகொலையை மூடிமறைக்க முயன்றது எப்படி?: 30 ஆண்டுகளின் பின்னும் தொடரும் நீதித் தேடல்.

முப்பதாண்டுகளுக்கு முன்பு, ஜெனரல் ரட்கோ மிலாடிச் (Ratko Mladic) தலைமையிலான போஸ்னிய...

நீர்கொழும்பு சிறை மோதலில் உயிரிழந்த அதிகாரிகளுக்கு பதவி உயர்வு

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலில் உயிரிழந்த 8 அதிகாரிகளுக்கு சிறைச்சாலைகள் திணைக்களம் பதவி...

‘ஹபீபி’ திரைப்படத்தின் வருகையும் கலாச்சார மைல்கல்லும்: தமிழ்நாட்டின் திராவிட அரசியல் சூழலும் சிறுபான்மையினர் பிரதிநிதித்துவமும்

-ஃபாரிஸ் சாலி சிரேஷ்ட சட்டத்தரணி (கொழும்பு) சினிமா என்பது நம் காலத்தின் மிகச் சக்திவாய்ந்த...