கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!

Date:

கொழும்பு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல பகுதிகளில் நாளை (04) காலை 9:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை 12 மணிநேர நீர் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளது.

அதன்படி, கொழும்பு 01 முதல் கொழும்பு 15 வரையிலான பகுதிகள் மற்றும் பத்தரமுல்லை, பெலவத்தை, ஹோகந்தரை, கொஸ்வத்தை, தலவத்துகொடை, ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டே, ராஜகிரிய, மிரிஹான, மதிவெல, நுகேகொடை, நாவல, கொலன்னாவை, ஐடிஎச், கொட்டிக்காவத்தை, அங்கொடை, வெல்லம்பிட்டி, ஒருகொடவத்த, கடுவலை, மஹரகம, பொரலெஸ்கமுவ மற்றும் பிலியந்தலை ஆகிய பகுதிகளில் நீர் விநியோகம் நிறுத்தப்படும்.

முல்லேரியாவ கிரிட் துணை மின்நிலையத்தில் (Grid Substation) மேற்கொள்ளப்படவுள்ள அத்தியாவசியப் பராமரிப்புப் பணிகளுக்காக, அம்பத்தலை நீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கான மின்சார விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்படுவதே இந்த நீர் விநியோகத் தடைக்குக் காரணம் என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை (NWSDB) தெரிவித்துள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

நாட்டில் டெங்கு மரணங்கள் 47 ஆக அதிகரிப்பு

நாட்டில் பதிவாகியுள்ள டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 47 ஆக உயர்ந்துள்ளதாக தேசிய...

ஸ்ரெப்ரெனிகா இனப்படுகொலையை மூடிமறைக்க முயன்றது எப்படி?: 30 ஆண்டுகளின் பின்னும் தொடரும் நீதித் தேடல்.

முப்பதாண்டுகளுக்கு முன்பு, ஜெனரல் ரட்கோ மிலாடிச் (Ratko Mladic) தலைமையிலான போஸ்னிய...

நீர்கொழும்பு சிறை மோதலில் உயிரிழந்த அதிகாரிகளுக்கு பதவி உயர்வு

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலில் உயிரிழந்த 8 அதிகாரிகளுக்கு சிறைச்சாலைகள் திணைக்களம் பதவி...

‘ஹபீபி’ திரைப்படத்தின் வருகையும் கலாச்சார மைல்கல்லும்: தமிழ்நாட்டின் திராவிட அரசியல் சூழலும் சிறுபான்மையினர் பிரதிநிதித்துவமும்

-ஃபாரிஸ் சாலி சிரேஷ்ட சட்டத்தரணி (கொழும்பு) சினிமா என்பது நம் காலத்தின் மிகச் சக்திவாய்ந்த...