யாருமே அதனை எதிர்பார்க்கவில்லை. அரசும் புலனாய்வுத் துறையினரும் கணிக்கத் தவறினார்கள். ஊடகங்களுக்கும் அது செய்திதான்.
2014-க்குப் பிறகு முதல் முறையாக பிரதமர் வீட்டுக்கு முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டிருக்கின்றது. ராகுலின் தலைமையில் எம்பிக்களின் பட்டாளமே திரண்டிருக்கின்றது. விசிக எம்பிக்கள்தாம் மிஸ்ஸிங்.
ஆனால் என்ன நடக்கின்றது, ஏது நடக்கின்றது என்பதைப் புரிந்து கொள்வதற்குள்ளாகவே திமுதிமுவென்று மிகப் பெரும் மக்கள் திரள் பிரதமர் வீட்டுக்கு முன்பு திரண்டுவிட்டது.
‘தர்மேந்திர பிரதானே பதவி விலகு’ என்று ஒலித்து வந்த முழக்கத்தை ‘மோடி, ஷா பதவி விலகு’ என்று மாற்றியமைத்து அடுத்தக் கட்டத்துக்குப் போராட்டத்தை நகர்த்தியிருக்கின்றார் ராகுல்.
கைது செய்கின்ற போது நடந்த களேபரத்தில் ராகுலின் மடிப்புக் கலையாத சட்டையில் மண்ணும் தூசும் படிந்துவிட்டன. அவருடைய மூக்கிலிருந்து ஒரு துளி இரத்தம் வழிந்திருக்கின்றது.
