நீர்கொழும்பு சிறை மோதல்: விசாரணைக்கு குழு நியமனம்

Date:

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவம் தொடர்பாக முறையான மற்றும் விரிவான விசாரணையை நடத்தி, சம்பவத்திற்கான காரணங்கள், எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் மீண்டும் இடம்பெறாமல் தடுப்பதற்கான பரிந்துரைகளை உள்ளடக்கிய அறிக்கையை சமர்ப்பிப்பதற்காக, இன்று (06) கூடிய அமைச்சரவை குழுவொன்றை நியமிக்க அனுமதி அளித்துள்ளது.

அந்தக் குழுவின் தலைவராக ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி பிரியந்த பெர்னாண்டோ நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும், ஓய்வுபெற்ற மேலதிக சொலிசிட்டர் ஜெனரல், ஜனாதிபதி சட்டத்தரணி மிலிந்த குணதிலக்க மற்றும் ஜனாதிபதி சட்டத்தரணி மோகன் வீரக்கோன் ஆகியோர் குழுவின் ஏனைய உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த குழுவினர் இச்சம்பவம் தொடர்பான அனைத்து விடயங்களையும் விரிவாக விசாரணை செய்து, தமது பரிந்துரைகளை உள்ளடக்கிய அறிக்கையை அரசாங்கத்திடம் சமர்ப்பிக்க உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

தேர்தல் சட்ட மறுஆய்வு: அனைத்துத் தரப்பினரும் முன்மொழிவுகளைச் சமர்ப்பிக்க அகில இலங்கை முஸ்லிம் லீக் இளைஞர் முன்னணிகள் சங்கம் வேண்டுகோள்!

இலங்கையின் எதிர்காலத் தேர்தல் முறைமை மற்றும் சிறுபான்மை சமூகங்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தை...

இஸ்ரேலிய சிறைகளில் பாலஸ்தீன மருத்துவர்களுக்குக் கொடூர சித்திரவதை: உயிருக்குக் கடும் ஆபத்து என மனித உரிமை அமைப்புகள் எச்சரிக்கை!

இஸ்ரேலிய சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள பாலஸ்தீன மருத்துவர்களான ஹுசாம் அபு சபியா (Hussam...

நீர்கொழும்பு சிறைச்சாலை வன்முறை- சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் விளக்கம்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இன்று (திங்கட்கிழமை) காலை காலை உணவு விநியோகிக்கப்பட்ட போது,...