முன்பள்ளி செல்லும் சிறுவர்களுக்கு பாதுகாப்பான ஆடைகளை அணிவிக்குமாறு வேண்டுகோள்!

Date:

டெங்கு அச்சுறுத்தல் நிலவும் சூழலில், டெங்கு நுளம்புகளிடமிருந்து பாதுகாப்பதற்காக, தங்கள் கைகளையும் கால்களையும் முழுமையாக மறைக்கும் வகையிலான பொருத்தமான ஆடைகளை முன்பள்ளிச் சிறார்கள் அணிவதை உறுதி செய்யுமாறு பெற்றோருக்கு மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் வலியுறுத்தியுள்ளார்.

அரச தகவல் திணைக்களத்தில் இன்று (13) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் இதனைக் கூறினார்.

டெங்குவைத் தடுக்கும் நடவடிக்கையாக, கைகளையும் கால்களையும் மறைக்கும் வகையிலான பொருத்தமான ஆடைகளை அணிந்து பாடசாலைக்குச் செல்ல மாணவர்களை அனுமதிக்கும் வகையில் கல்வி அமைச்சு அண்மையில் எடுத்த முடிவைத் தொடர்ந்து இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நுளம்பு கடியினால் பாதிக்கப்படுவதைக் குறைப்பதன் மூலம், பாடசாலை செல்லும் சிறுவர்களிடையே டெங்கு பரவுவதைக் கட்டுப்படுத்துவதே இம்முயற்சியின் நோக்கமாகும்.

இதே முன்னெச்சரிக்கை நடவடிக்கையை முன்பள்ளி செல்லும் சிறுவர்களுக்கும் மேற்கொள்ள வேண்டும் என்று கூறிய அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ், சிறுவர்களை முன்பள்ளிக்கு அனுப்பும் முன் அவர்களுக்குப் பாதுகாப்பான ஆடைகளை அணிவிக்குமாறு பெற்றோர்களை வலியுறுத்தினார்.

Popular

More like this
Related

அஸ்வெசும நிதி நாளை மறுதினம் வங்கிக் கணக்குகளுக்கு!

அஸ்வெசும நலன்புரித் திட்டத்திற்கான நிதி நாளை மறுதினம் (19) பயனாளி குடும்பங்களின்...

வங்கிக் கணக்குகளை குறிவைத்து புதிய மோசடி; மக்களை எச்சரிக்கும் SLCERT!

இணையம் மற்றும் தொலைபேசி ஊடாக இடம்பெறும் பல்வேறு மோசடி நடவடிக்கைகள் குறித்து...

பட்டம் விடுவதால் ஏற்படும் அனர்த்தங்கள்: பிள்ளைகளின் பாதுகாப்பில் கூடுதல் அக்கறை அவசியம்!

பாடசாலை விடுமுறையிலுள்ள மாணவர்களின் பாதுகாப்பு குறித்து விசேட கவனம் செலுத்த வேண்டுமென...

நீரை சிக்கனமாகப் பயன்படுத்துமாறு பொதுமக்களிடம் கோரிக்கை!

வறட்சியான வானிலை நிலவியபோதிலும், நாடளாவிய ரீதியில் தற்போது தடையற்ற நீர் விநியோகம்...