மெக்குவாரி வங்கியின் தலைமை நிர்வாக அதிகாரி ஷெமாரா விக்ரமநாயக்க ஓய்வு

Date:

ஆஸ்திரேலியாவின் முன்னணி நிதிச் சேவை நிறுவனமான ‘மெக்குவாரி குரூப்’ (Macquarie Group) நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி (CEO) இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த ஷெமாரா விக்ரமநாயக்க  வரும் நவம்பர் மாதம் ஓய்வுபெற உள்ளார்.

கிட்டத்தட்ட 40 ஆண்டுகாலப் பணியை நிறைவு செய்யும் இவர், நிறுவனத்திலிருந்து விலகும்போது $260 மில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள நிறுவனப் பங்குகளைக் கொண்டிருப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

64 வயதான ஷெமாரா விக்ரமநாயக்க வரும் நவம்பர் 6, 2026 அன்று பொறுப்பில் இருந்து விலகுகிறார். அவருக்குப் பதிலாக வங்கியின் நிதிச் சேவைகள் பிரிவின் தலைவராக இருக்கும் கிரெக் வார்ட் (Greg Ward) புதிய சி.இ.ஓ-வாகப் பொறுப்பேற்பார்.

1987-இல் மெக்குவாரியில் இணைந்த ஷெமாரா, 2018-இல் நிறுவனத்தின் முதல் பெண் சி.இ.ஓ-வாகப் பொறுப்பேற்று வரலாற்றுச் சாதனை படைத்தார்.

இவரிடம் மெக்குவாரி நிறுவனத்தின் 14,74,481 நேரடிப் பங்குகள் உள்ளன. இதுதவிர, பல மில்லியன் மதிப்புள்ள கட்டுப்பாட்டுப் பங்குகளையும் (Restricted & Performance Share Units) வைத்துள்ளார்.

ஆஸ்திரேலியாவில் அதிக சம்பளம் பெறும் முதன்மை அதிகாரிகளில் ஒருவரான இவரது கடந்த ஆண்டின் மொத்த ஊதியம் சுமார் $21 மில்லியன் டாலராகும்.

“கோவிட் பெருந்தொற்று சவால்கள் மற்றும் புதிய சந்தைகளின் விரிவாக்கத்தின் போது மெக்குவாரி நிறுவனத்தை ஷெமாரா சிறப்பாக வழிநடத்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

இந்த ஆண்டில் இதுவரை 1.3 மில்லியன் சுற்றுலா பயணிகள் வருகை!

இந்த ஆண்டில் இதுவரை இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை...

இந்திய ரிசர்வ் வங்கியின் அதிகாரி சதக்கத்துல்லா மறைவு!

இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) மேனாள் அதிகாரியும், பொருளாதார வல்லுநருமான முனைவர்...

இலங்கையில் 83,000 ஐக் கடந்தது டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை!

நாட்டில் இந்த ஆண்டில் இதுவரை பதிவான டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை மேலும்...

ஆன்மீக ஒளி பரப்பும் எசல பௌர்ணமி தினம் இன்று!

இலங்கை உள்ளிட்ட உலகெங்கும் உள்ள பௌத்த மக்களால் மிகுந்த பக்தியுடன் அனுஷ்டிக்கப்படும்...