அரசாங்கம் தனது மற்றுமொரு தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், 10,000 காணி அனுமதிப்பத்திரங்களை வழங்கும் தேசிய வேலைத்திட்டத்தை இன்று (02) ஆரம்பித்து வைத்துள்ளது.
இதன் ஆரம்பத்தைக் குறிக்கும் வகையில், வெலிமடை மற்றும் ஹாலி எல பகுதிகளைச் சேர்ந்த 1,023 குடும்பங்களுக்குக் காணி அனுமதிப்பத்திரங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
தலைக்கு மேல் ஒரு கூரை இல்லாத மக்களுக்கு நிரந்தர நிழலை வழங்கும் கனவை நனவாக்கி, இந்த வேலைத்திட்டம் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் என அமைச்சர் சமந்த வித்யாரத்ன இங்கு தெரிவித்துள்ளார்.
