அர்ஜுனாவின் MP பதவியை ரத்து செய்யக் கோரி நீதிமன்றில் மனு!

Date:

பாராளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ஜுனாவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை செல்லுபடியற்றதாக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை, விசாரணைக்காக எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 31ஆம் திகதி அழைக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (02) உத்தரவிட்டுள்ளது.

Abhinava Niwahal Peramuna தலைவர் ஓஷல ஹேரத் இந்த மனுவைத் தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு இன்று (02) நீதிமன்றில் அழைக்கப்பட்ட போது, மனுவை விசாரணைக்கு எடுப்பதற்காக மிக நெருக்கமான திகதி ஒன்றினை வழங்குமாறு மனுதாரர் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதற்கு பாராளுமன்ற உறுப்பினர் அர்ஜுனாவின் சட்டத்தரணியும் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை.

இதன்படி, குறித்த மனு மீதான விசாரணையை ஓகஸ்ட் மாதம் 31ஆம் திகதி அழைப்பதற்கு உத்தரவிடப்பட்டது.

ராமநாதன் அர்ஜுனா பாராளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட காலப்பகுதியிலும் அவர் அரசாங்க வைத்தியராகப் பணியாற்றி வந்ததாக மனுதாரர் குறிப்பிட்டுள்ளார்.

அரசியலமைப்பின் பிரகாரம் இது சட்டவிரோதமானது என மனுதாரர் தனது மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

இலங்கை கடற்படையின் முன்னாள் தளபதி வசந்த கரன்னாகொட கைது!

இலங்கை கடற்படையின் முன்னாள் தளபதி Admiral of the Fleet வசந்த...

மாற்றுத்திறனாளியான புத்தளத்தின் பிரபல கலைஞர் சலீம் கான் அவர்களுக்குப் பாராட்டு: வடமேல் மாகாண பாடல் போட்டியில் சாதனை!

புத்தளம் நகரைச் சேர்ந்த பிரபல அறிவிப்பாளரான சலீம் கான் எனப்படும், ஏ.ஆர்.எம்....

கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!

கொழும்பு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல பகுதிகளில் நாளை (04) காலை...

10,000 காணி அனுமதிப்பத்திரங்கள் வழங்கும் தேசிய வேலைத்திட்டம் இன்று ஆரம்பம்!

அரசாங்கம் தனது மற்றுமொரு தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், 10,000 காணி...