கஞ்சிப்பானி இம்ரானின் சகாக்கள் இன்று நாட்டிற்கு

Date:

மலேசியாவில் கைதுசெய்யப்பட்ட பிரபல பாதாள குழு செயற்பாட்டாளர்களாக கருதப்படும் மூவர் இன்று நாட்டிற்கு அழைத்து வரப்படவுள்ளனர். உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஒலுகலவின் தலைமையில் நடத்தப்பட்ட விசேட சோதனை நடவடிக்கை ஊடாக மலேசியாவில் வைத்து அவர்கள் கைதாகினர்.

குறித்த சந்தேக நபர்கள், தேடப்படடு வரும் கஞ்சிப்பானி இம்ரானின் பிரதான சகாக்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதில் ஒருவரான இரத்மலானை சைமா என்பவருக்கு எதிராக சர்வதேச பொலிசாரினால் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் விசேட பாதுகாப்புடன் நாட்டிற்கு அழைத்து வரப்படும் இந்த 3 சந்தேக நபர்களும் மேலதிக விசாரணைகளுக்காக குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்படுவார்கள் என பொலிஸ் தலைமையக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கஞ்சிப்பான இம்ரானை கைதுசெய்யும் நோக்கில் உதவி பொலிஸ் அத்தியட்சகர் உள்ளிட்ட குழுவினர் மலேசியாவிற்கு சென்ற போதிலும் குறித்த நடவடிக்கையை கைவிட்டு இலங்கைக்கு திரும்ப வேண்டிய நிலை ஏற்ப்பட்டுள்ளது.

எனினும் மலேசிய பொலசாரும் இன்டர்போல் அமைப்பும்; கஞ்சிப்பானி இம்ரானை கைதுசெய்வதற்கான சோதனைகளை மலேசியாவில் தீவிரப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

ஜம்இய்யதுல் உலமாவின் பிரதம நிறைவேற்று அதிகாரியாக அஷ்ஷெய்க் வை.எல்.எம். நவவி நியமனம்

அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் பிரதம நிறைவேற்று அதிகாரியாக அஷ்ஷெய்க் வை.எல்.எம்....

சாகர காரியவசம் குற்ற விசாரணைப் பிரிவால் கைது

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) பொதுச் செயலாளரான சட்டத்தரணி சாகர காரியவசம்...

கடந்த 9 நாட்களில் 4292 டெங்கு நோயாளர்கள் அடையாளம்

வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 89,639 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய...