வறட்சியான வானிலை நிலவியபோதிலும், நாடளாவிய ரீதியில் தற்போது தடையற்ற நீர் விநியோகம் உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
எனினும், வீண்விரயம் செய்யாமல் அதனைச் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு அச்சபையின் தலைவர் சந்தன பண்டார பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
