நேபாள வெளியுறவு அமைச்சருடன் விஜித்த ஹேரத் தொலைபேசி உரையாடல்: உதவிக்கு தயார்!

Date:

நேபாளத்தில் ஏற்பட்ட கடும் வெள்ளப்பெருக்கைத் தொடர்ந்து நிலவும் சூழல் குறித்து, அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் சிசிர் கனால் (Shisir Khanal) உடன் இலங்கையின் வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித்த ஹேரத் (ஆக்கபூர்வமான தொலைபேசி உரையாடல் ஒன்றினை மேற்கொண்டார்.

இந்த உரையாடலின் போது, உதவி வழங்குவதற்கான இலங்கையின் தயார்நிலையை அமைச்சர் மீண்டும் உறுதிப்படுத்தினார்.

பேரிடரைத் தொடர்ந்து தேவைப்படும் குறிப்பிட்ட உதவிகளைக் கண்டறிந்து வழங்குவதற்காக, நேபாள அதிகாரிகளுடன் இலங்கையின் பேரிடர் மேலாண்மை மையங்கள் நெருக்கமாக ஒருங்கிணைந்து செயல்படும் என்று விஜித்த ஹேரத் தெரிவித்தார்.

நேபாள நிலநடுக்கம் தொடர்பான வெளிவிவகார அமைச்சர் எக்ஸ் பதிவில், “எங்கள் நெருங்கிய நண்பரும் அண்டை நாடான நேபாளத்துடனான ஒற்றுமையிலும் அர்ப்பணிப்பிலும் இலங்கை உறுதியாக உள்ளது – என்று குறிப்பிட்டுள்ளார்.

உயிரிழப்புகளையும் பரவலான அழிவையும் ஏற்படுத்திய கடுமையான வெள்ளப்பெருக்கைத் தொடர்ந்து, நேபாளத்தில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் நடைபெற்று வரும் வேளையில் வெளிவிவகார அமைச்சரின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதற்கிடையில், வெள்ளத்தால் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்து ஆழ்ந்த கவலையைத் தெரிவித்துள்ள ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க, பாதிக்கப்பட்ட மக்களுக்கு இலங்கையின் அனுதாபத்தையும் ஆதரவையும் தெரிவித்துள்ளார்.

மீட்பு மற்றும் சீரமைப்புப் பணிகளில் நேபாளத்திற்கு உதவ இலங்கை தயாராக உள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

நேபாள மக்களின் துயரத்தில் பங்கெடுக்கும் இலங்கை – ஜனாதிபதி அனுதாபம்!

நேபாளத்தின் கடும் வெள்ளப்பெருக்கினால் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்து ஜனாதிபதி அநுர குமார...

கடற்பிரதேசங்களில் பலத்த காற்று

புத்தளம் முதல் கொழும்பு மற்றும் காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையிலான கடற்பகுதிகளில்...

விண்கலத்தை விண்வெளிக்கு அனுப்பும் சர்வதேச முயற்சியில் கிண்ணியா மாணவி நூரி இணைவு: 27ஆம் திகதி இந்தியா பயணம்!

உலகளாவிய ரீதியில் முதல் முறையாக பெண் மாணவிகள் இணைந்து விண்கலமொன்றை விண்வெளிக்கு...

அரச சார்பற்ற நிறுவனங்கள் தொடர்பான சட்டமூல வரைவு குறித்த ஆலோசனைக் கூட்டம்!

அரச சார்பற்ற நிறுவனங்கள் தொடர்பான சட்டமூல வரைவு குறித்த ஆலோசனைக் கூட்டம்...