பாடசாலை விடுமுறையிலுள்ள மாணவர்களின் பாதுகாப்பு குறித்து விசேட கவனம் செலுத்த வேண்டுமென லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் பதில் பணிப்பாளர் வைத்தியர் பிரதீப் ரத்னசேகர அறிவுறுத்தியுள்ளார்.
பட்டம் விடுவதால் அனர்த்தங்களுக்கு பிள்ளைகள் முகம்கொடுக்கும் சம்பவங்கள் அதிகம் பதிவாகி வருகின்றன. கவனக்குறைவாக பட்டம் விடுவதால் உயிருக்கே ஆபத்து ஏற்படும் நிலை இருப்பதாக அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
உயரமான இடங்களிலிருந்து பட்டம் விடும் போது கீழே விழ நேரிடலாம். குழுக்களாக பட்டம் விடும் போது மோதல்கள் ஏற்படலாம். உயர் மின்னழுத்த மின் கம்பிகளுக்கு அருகாமையில் பட்டம் விடுவது மிகவும் ஆபத்தானது.
பட்டத்தின் நூல்கள் மின் கம்பிகளுடன் தொடர்பு கொண்டால் அந்த நூல் வழியாக மின்சாரம் நபருக்கு பாயக்கூடும்.
இதனால் பாடசாலை விடுமுறையில் பிள்ளைகள் எவ்வாறான விளையாட்டுக்களில் ஈடுபடுகின்றார்கள் என்பது குறித்து பெற்றோர் கூடுதல் கவனம் செலுத்த வேண்டுமெனவும் வைத்தியர் பிரதீப் ரத்னசேகர அறிவுறுத்தியுள்ளார்.
