சவூதி அரேபியாவின் புனித மக்கா நகரில் அமைந்துள்ள புனித மஸ்ஜிதுல் ஹராம் வளாகத்தில், சவூதி இஸ்லாமிய விவகாரங்கள் அமைச்சின் ஒழுங்கமைப்பில் 2026ஆம் ஆண்டிற்கான 46ஆவது சர்வதேச மன்னர் அப்துல் அஸீஸ் திருக்குர்ஆன் மனனம், பாராயணம் மற்றும் தஃப்சீர் போட்டி கோலாகலமாக நடைபெற்று வருகின்றது.
இம்மாபெரும் சர்வதேச மேடையில், இலங்கையின் பிரதிநிதியாக ஸயீத் முஹம்மத் இப்பத் கலந்துகொண்டு தனது மிகச்சிறந்த குர்ஆன் பாராயணத் திறமையை வெளிப்படுத்தித் தாய்நாட்டிற்குப் பெருமை சேர்த்து வருகின்றார்.
இம்முறை வரலாற்றிலேயே முதன்முறையாகப் பெண் போட்டியாளர்களுக்கான தனிப்பிரிவும், 10 மில்லியன் சவூதி ரியால்களுக்கு மேலான மிகப்பெரிய பரிசுத்தொகையும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச ரீதியில் புகழ்பெற்ற குர்ஆன் கலை வல்லுநர்களைக் கொண்ட நடுவர் குழுவின் முன்னிலையில் அதிநவீன மின்னணு முறைமையைப் பயன்படுத்தித் துல்லியமாக மதிப்பெண்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
