கொழும்பு, மாளிகாவத்தை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில், பாதாள உலகக் குழுவின் முக்கிய உறுப்பினரான ‘காஞ்சிபானி இம்ரானின்’ நெருங்கிய உறவினர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மாளிகாவத்தை – சங்கராஜ மாவத்தை பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த இரு அடையாளம் தெரியாத நபர்கள், குறித்த நபரை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த நபர் , சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களை அடையாளம் காண்பதற்கும் அவர்களைக் கைது செய்வதற்கும் மாளிகாவத்தை பொலிஸார் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
