முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் முன்னாள் பிரத்தியேக செயலாளரான சுகீஸ்வர பண்டாரவை எதிர்வரும் ஆகஸ்ட் 25 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (12) உத்தரவிட்டுள்ளது.
சந்தேகநபரான சுகீஸ்வர பண்டார, சட்டவிரோதமாக இரண்டு சம்பளங்களைப் பெற்றுக் கொண்டார் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு, தொடர்ச்சியாக விளக்கமறியலில் வைக்கப்பட்டு வந்தார்.
இந்நிலையில், அவரது விளக்கமறியல் காலம் நிறைவடைந்ததைத் தொடர்ந்து இன்று கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் அவர் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே, நீதவான் இப்புதிய உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
