நிலவும் மோசமான வானிலை நிலவரத்தைக் கருத்தில் கொண்டு, நடைபெறவுள்ள தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் க.பொ.த. உயர்தரப் (A/L) பரீட்சை தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று நாளை (05) நடைபெறவுள்ளது.
தற்போதைய மழைக்காலச் சூழலில் பரீட்சைகளை நடத்துவது தொடர்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இக்கலந்துரையாடல் கவனம் செலுத்தும் என்று வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அஜித் விஜேமன்ன தெரிவித்தார்.
