அஸ்வெசும கொடுப்பனவு செப்டம்பர் 16 முதல் வங்கிக் கணக்குகளில்!

Date:

அஸ்வெசும நலன்புரி திட்டத்தின் 2026 செப்டம்பர் மாதத்திற்கான கொடுப்பனவுகள் எதிர்வரும் 16 ஆம் திகதி முதல் பயனாளிகளின் வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்படும் என நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.

நலன்புரி நன்மைகள் சபை வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையின்படி, 992,053 குடும்பங்களுக்கு மொத்தமாக 9,181,696,250 ரூபா தொகை செப்டம்பர் மாத கொடுப்பனவாக வழங்கப்படவுள்ளது.

மேலும், நிலுவையில் உள்ள கொடுப்பனவுகளுக்காக 213,335 குடும்பங்களுக்கு 2,120,856,250 ரூபா தொகையும் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, குறித்த நிதி தொகைகள் 2026 செப்டம்பர் 16 ஆம் திகதி பயனாளிகளின் வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்படுவதுடன், செப்டம்பர் 17 ஆம் திகதி முதல் அவற்றை பெற்றுக்கொள்ள முடியும் என நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

சுங்க வருவாய் ரூ. 2 டிரில்லியனைக் கடந்தது!

இலங்கை சுங்கத் திணைக்களம், தனது ஆண்டு வருவாய் செயல்திறனில் ஒரு குறிப்பிடத்தக்க...

கஹட்டோவிட்டவில் MEPS & MLSC நடத்தும் முப்பெரும் விழா 2026.

கஹட்டோவிட்ட Muslim Ladies Study Circle  மற்றும் MEPS ஆகியவற்றின் ஏற்பாட்டில்...

நாமல் ராஜபக்ஷவுக்கு எதிரான விளக்கமறியல் நீடிப்பு!

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை எதிர்வரும் செப்டம்பர் 23 ஆம் திகதி...

சேதமடைந்த உபகரணங்களுக்காக ரூமேஷ் தரங்கவுக்கு துருக்கிய ஏர்லைன்ஸ் இழப்பீடு!

நாடு திரும்பும் வழியில் தனது விளையாட்டு உபகரணங்களுக்கு ஏற்பட்ட சேதத்திற்காக, இலங்கை...