இலங்கையின் 5 முக்கிய நகரங்களுக்கு மேலாக இன்று (செப்டம்பர் 02) நண்பகல் 12.10 மணியளவில் சூரியன் நேராக உச்சம் கொடுக்கவுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
சூரியனின் தெற்கு நோக்கிய நகர்வு காரணமாக, இன்று பின்வரும் நகரங்களுக்கு மேலாக சூரியன் நேரடியாக நிலைகொள்ளும்:
ஆனைமடுவ, மொரகொல்லாகம, தம்புள்ளை,மணம்பிட்டிய, வாழைச்சேனை
சூரியனின் ஒப்பீட்டு தெற்கு நோக்கிய இயக்கத்தின் காரணமாக, ஆகஸ்ட் 28 முதல் எதிர்வரும் செப்டம்பர் 07 ஆம் திகதி வரை இலங்கையின் அட்சரேகைகளுக்கு மேலாக சூரியன் நேரடியாக உச்சம் கொடுக்கும் என திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.
