தேசிய ஒற்றுமை மற்றும் மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி மஹிந்த தேசப்பிரியவுடன் விசேட புத்திஜீவித்துவ கலந்துரையாடல்!

Date:

‘நல்லிணக்கம் மற்றும் சமய நல்லிணக்கத்தில் சமகால நிலை’ தற்போதைய போக்குகள் என்ற கருப்பொருளில் ஒரு புத்திஜீவித்துவ கலந்துரையாடல், நாவல, கொஸ்வத்தவில் உள்ள பஹன ஊடக நிறுவனத்தில் நேற்று பிற்பகல் நடைபெற்றது.

இந்நிகழ்வில் தேர்தல் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய, ‘இலங்கையில் நல்லிணக்கம் மற்றும் சமய நல்லிணக்கத்தில் சமகால நிலை’ எனும் தலைப்பில் உரையாற்றினார்.

‘பஹன’ ஊடக நிறுவனத்தின் தலைவர் அஸ்-ஸெய்யித் சாலிம் ரிஃபாய் மௌலானா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், ஓய்வுபெற்ற ஆயர் ஆசிரி பி. பெரேரா, முன்சீஃப் மௌலவி, மஞ்சுள கஜநாயக்க, சுஜீவ கயநாத், மது ஹெட்டியாரச்சி, நிஷாந்த பிரீதிராஜ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு தமது கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டனர்.

இதன்போது, பிரதமவிருந்தினராகக் கலந்துகொண்ட மஹிந்த தேசப்பிரியவிற்கு, பஹன வெளியீடாக வெளிவந்துள்ள ‘ (අභිමානවත් ඉතිහාසයක ලාංකේය මුස්ලිම් ලකුණ) எனும் நூல் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

இந்நூலை ‘பஹன’ ஊடக நிறுவனத்தின் தலைவர் அஸ்ஸெய்யித் சாலிம் ரிஃபாய் மௌலானா, நூலின் மொழிபெயர்ப்பாளர் கலாநிதி தம்மிக ஜயசிங்க மற்றும் பஹன ஊடக நிறுவனத்தின் ஊடக நிறுவனத்தின் நிர்வாகப் பணிப்பாளர் அப்துல் முஜீப் மௌலவி ஆகியோர் இணைந்து வழங்கினர்.

சிவில் சமூக பிரதிநிதிகளும் இந்நிகழ்வில் பங்குகொண்டமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

புலமைப்பரிசில் பெறுபேறுகள் வெளியீடு!

2026ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள்...

புத்தளம் தள வைத்தியசாலையில் புதிய வைத்திய அத்தியட்சகருக்கு வரவேற்பு நிகழ்வும் பதில் அத்தியட்சகரின் விடைபெறுதல் நிகழ்வும்

புத்தளம் தள வைத்தியசாலையின் புதிய வைத்திய அத்தியட்சகராகப் (Medical Superintendent) பொறுப்பேற்றுள்ள...

சுரேஷ் சலேயின் உடல்நிலை குறித்து அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவு!

அரச புலனாய்வு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ்...

கொழும்பின் பல பகுதிகளில் 24 மணிநேர நீர்வெட்டு!

கொழும்பின் பல பகுதிகளில் நாளை (03) முதல் 24 மணிநேரத்திற்கு நீர்...