அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ள நிலையில், ஹோர்முஸ் நீரிணை வழியாக கச்சா எண்ணெய் போக்குவரத்தில் நீண்டகால இடையூறு ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளது.
இதன் காரணமாக சர்வதேச சந்தையில் எண்ணெய் விலை தொடர்ச்சியாக மூன்றாவது முறையாக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, பிரென்ட் கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 97 அமெரிக்க டொலர்களை எட்டியுள்ளது.
இது 4.6 சதவீத அதிகரிப்பாகும். கடந்த மாதம் எண்ணெய் விலையில் சிறிய அளவிலான அதிகரிப்பு மட்டுமே காணப்பட்ட நிலையில், தற்போது அதன் விலை பெப்ரவரி மாத இறுதியில் போர் ஆரம்பிப்பதற்கு முன்னர் காணப்பட்ட மட்டத்தை விட 30 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
