ஓகஸ்ட் மாதத்திற்கான அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு இன்றைய தினம் பயனாளர்களின் வங்கி கணக்குகளில் வைப்பிலிடப்படவுள்ளதாக நலன்புரி சபை தெரிவித்துள்ளது. இதற்கமைய 3.48 பில்லியன் ரூபா பயனாளர்களின் வங்கி கணக்குகளுக்கு வைப்பிலிடப்படவுள்ளன.
திட்டத்தின் முதற்கட்டமாக 3.091 பில்லியன் ரூபா பணம் 70 வயதிற்கு மேற்ப்பட்ட 618,352 பேருக்கு பகிர்ந்தளிக்கப்படவுள்ளதாக நலன்புரி சபை சுட்டிக்காட்டியுள்ளது.
இரண்டாம் திட்டத்தின் கீழ் 391.3 மில்லியன் ரூபா பணம் 78,260 பேருக்கு பகிர்ந்தளிக்கப்படும்.
