களுத்துறை பாலந்த நூரானியா ஜும்ஆ பள்ளிவாசலில் நல்லிணக்க நிகழ்ச்சி: அரசு அதிகாரிகளுக்கு இஸ்லாம் குறித்த தெளிவுபடுத்தல்!

Date:

நிதா அறக்கட்டளை நிறுவனத்தினால்  “மொபைல் இணைவாழ்வு திட்டத்தின்” (Mobile Coexistence Project) கீழ், களுத்துறை மாவட்டம் பாலந்த பகுதியில் அமைந்துள்ள நூரானியா ஜும்ஆ பள்ளிவாசலில் சிறப்பு நல்லிணக்க நிகழ்வு ஒன்று அண்மையில் நடத்தப்பட்டது.

“நமது தாய்நாட்டில் அமைதி மற்றும் நல்லிணக்கத்தை உருவாக்குவோம்” எனும் கருப்பொருளில் 2026 செப்டம்பர் 09 புதன்கிழமை அன்று இந்த நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.

தேசிய மொழிக் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தைச் (NILET) சேர்ந்த 33 அரசு அதிகாரிகள் கொண்ட குழுவினர் இதில் கலந்துகொண்டனர்.

இலங்கையின் பல்வேறு இன மற்றும் மத சமூகங்களுக்கு இடையே அமைதியான மற்றும் பரஸ்பர நல்லிணக்கச் சூழலை மேம்படுத்துவதே இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

இஸ்லாம் மார்க்கம் குறித்து நிலவும் தவறான கருத்துக்கள் மற்றும் சந்தேகங்களைத் தெளிவுபடுத்தி, பங்கேற்பாளர்களுக்கு அம்மார்க்கம் பற்றிய தெளிவான, துல்லியமான மற்றும் சரியான புரிதலை வழங்க நிதா அமைப்பு இந்த நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

சலேவின் மருத்துவ அறிக்கை குறித்து நீதிமன்ற தீர்ப்பு

சுரேஷ் சலேவின் மருத்துவ அறிக்கையை நீதிமன்றில் சமர்ப்பிக்காதமை தொடர்பில் கொழும்பு தேசிய...

2027 ஆம் நிதியாண்டு ஒதுக்கீட்டு சட்டமூலம் நாடாளுமன்றத்திற்கு!

2027 ஆம் நிதியாண்டிற்கான ஒதுக்கீட்டு சட்டமூலத்தை அரச வர்த்தமானியில் வெளியிடவும், அதனைத்...

சோதனையிலிருந்து சாதனைக்கு..; MDC-யின் சாதனைப் பயணம்1

-எழுதியவர். ஆர்ஸ் ஷித்தீக் கல்வி, மனஉறுதி மற்றும் சமூக முன்னேற்றத்தின் இரண்டு ஆண்டுகள்...

மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சி: கடுமையாக்கப்படும் கட்டுப்பாடுகள்; முடங்கியது மாட்டு இறைச்சி வணிகம்.

இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத் தலைநகர் கொல்கத்தாவில், டாங்ரா (Tangra) பகுதியில்...